கலம்பக நூல்களில் மிகப் பழமையான நந்திக் கலம்பகம், ஒரு வரலாற்று நூலாகத் திகழும் தனிச் சிறப்புப் பெற்றது. தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என வழங்கப் பெறும் மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்ட நூல் இது. மூன்றாம் நந்திவர்மன் கி.பி. 825 முதல் 850 வரை ஆண்டவன். நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் இன்னார் என்று உறுதியாகக் கூற முடியவில்லை. நந்திவர்மனின் மாற்றாந்தாய் மக்கள் நால்வரில் ஒருவன், இவனைக் கொல்வதற்காகவே வசை வைத்து இந்நூலைப் பாடினான் என்றும், பாடியவனின் பெயர் 'காடவன்' என்பதாக இருக்கலாம் என்றும் கருதுவர். நந்திக் கலம்பகத்தின் பாடல் ஒன்றைத் தற்செயலாய்க் கேட்ட நந்திவர்மன், நூல் முழுவதையும் கேட்க விரும்பினான். நூல் முழுவதையும் கேட்டால், அவன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழ்ப் பாடல் கேட்கும் தணியாத ஆவலுக்குத் தன்னையே பலியாக, கொடுக்க முன்வந்தான். நூல் முழுவதையும் கேட்ட மன்னன் இறந்தான். தமிழுக்காக தமிழ்ப் பாடலுக்காகத் தரணியாளும் மன்னன் தன் உயிரையே உவந்தளித்தான் என்பது உலக வரலாற்றில் வேறெங்கும் காண முடியாத நிகழ்ச்...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.