முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

திருவரங்க கலம்பகம் மற்றும் நந்தி

வைணவ சமயத்தைச் சார்ந்த கலம்பக  நூல்களில் சிறப்பு மிக்கது 'திருவரங்கக் கலம்பகம்'. இதை இயற்றியவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். இவர் கி.பி.17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் 'திவ்ய கவி' என்னும் சிறப்புப் பெயரும், 'அழகிய மணவாளதாசர்' என்னும் வேறு பெயரும் இவருக்கு உண்டு. இவர் இயற்றிய எட்டு நூல்களை இணைத்து 'அஷ்டப் பிரபந்தம்' எனக்கூறுவர். 'அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்' என்னும் பழமொழி இந்நூல்களின் உயர்வை உரைக்கும் 'திருவரங்கக் கலம்பகம்' அஷ்டப் பிரபந்தம் என்னும் எட்டு நூல்களில் ஒன்றாகும்.                        இக்கலம்பகத்தில் 'மறம்' என்னும் உறுப்பில் அமைந்த பாடல், புலவர் மாலிடம் கொண்ட மாறாக் காதல்,மறம்,நகைத்திறம் ஆகிய மூன்றும் கலந்த முடி மணியாக ஒளி விடுகின்றது. மதுரை கலம்பகம்  மதுரை சோமசுந்தரக் கடவுள் மீது குமரகுருபரர் பாடியது 'மதுரை கலம்பகம்'. இந்நூலின் சிறப்புணர 'அம்மானை' என்னும் உறுப்பில் அமைந்த பாடலைப் பார்ப்போம். அம்மனை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இவ்விளையாட்டுகளில் ஈடுபட்ட மூன்று பெண்களில் ஒருத்தி, ...

நந்திக் கலம்பகம்

      கலம்பக நூல்களில் மிகப் பழமையான நந்திக் கலம்பகம், ஒரு வரலாற்று நூலாகத் திகழும் தனிச் சிறப்புப் பெற்றது.  தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என வழங்கப் பெறும் மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்ட நூல் இது.  மூன்றாம் நந்திவர்மன் கி.பி. 825 முதல் 850 வரை ஆண்டவன்.     நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் இன்னார் என்று உறுதியாகக் கூற முடியவில்லை.  நந்திவர்மனின் மாற்றாந்தாய் மக்கள் நால்வரில் ஒருவன், இவனைக் கொல்வதற்காகவே வசை வைத்து இந்நூலைப் பாடினான் என்றும், பாடியவனின் பெயர் 'காடவன்' என்பதாக இருக்கலாம் என்றும் கருதுவர்.     நந்திக் கலம்பகத்தின் பாடல் ஒன்றைத் தற்செயலாய்க் கேட்ட நந்திவர்மன், நூல் முழுவதையும் கேட்க விரும்பினான்.  நூல் முழுவதையும் கேட்டால், அவன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழ்ப் பாடல் கேட்கும் தணியாத ஆவலுக்குத் தன்னையே பலியாக, கொடுக்க முன்வந்தான்.  நூல் முழுவதையும் கேட்ட மன்னன் இறந்தான்.  தமிழுக்காக தமிழ்ப் பாடலுக்காகத் தரணியாளும் மன்னன் தன் உயிரையே உவந்தளித்தான் என்பது உலக வரலாற்றில் வேறெங்கும் காண முடியாத நிகழ்ச்...

கலம்பகம்

     பலவகை வண்ணமும், வடிவமும், வாசகமும் நிறைந்த மலர்களைக் கலந்து தொடுக்கப்பட்ட பூமாலையைக் கதம்பம் என்றாற் போலப் பலவகை உறுப்பும், பலவகைப் பொருளும், பல்வகைச் செய்யுளால் கலந்து பாடப் பெறும் சிற்றிலக்கியம் கலம்பகம் எனப்பட்டது.     இவ்வாறு பாடப்பெறும் கலம்பத்தின் செய்யுள் தொகை, கடவுளர்க்கு நூறு, முனிவர்க்குத் தொண்ணூற்றைந்து, அரசர்க்குத் தொண்ணூறு, அமைச்சர்க்கு எழுபது, வணிகர்க்கு ஐம்பது, வேளாளர்க்கு முப்பது என்னும் அளவில் அமைய வேண்டும் என்பதும் விதி.  இவ்வளவினை மீறிய கலம்பகங்களும் உண்டு.  திருக்கலம்பகத்தில் 110 செய்யுட்களும், ஆளுடைய பிள்ளை கலம்பகத்தில் 49 செய்யுட்களும் உள்ளன.     கலம்பகம், பெரும்பான்மை அகத்திணைச் செய்திகளையையும் , சிறுபான்மை புறத்திணைச் செய்திகளையும் அவற்றின் துறைகளையும் பெற்றுத் திகழும்.     கலம்பகங்கள் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு முதல் தோன்றலாயின எனக் கூறுவர் .  காலத்தால் முற்பட்ட கலம்பகம், நந்திக் கலம்பகம், திருவெங்கைக் கலம்பகம், அழகர் கலம்பகம், மதுரைக் கலம்பகம், கச்சிக் கலம்பகம்,தில்லைக் கலம்பகம், திருக்காவலூர்க் கல...

காந்தியம்மை பிள்ளைத் தமிழ்

    பெண்பாற் பிள்ளைத் தமிழில் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழுக்கு அடுத்த நிலையில் விளங்கும் சிறப்புப் பெற்றது. 'திருநெல்வேலிக் காந்தியம்மை பிள்ளைத் தமிழ்'.  இந்நூலைப் பாடியவர் திருநெல்வேலியைச் சார்ந்த தச்சன் நல்லூரில் வாழ்ந்த அழகிய சொக்கநாதர்.  இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டினர் .     சிறுமி காந்தியம்மையைக் கவிஞர் 'வருக வருக' என்றழைக்கும் வருகைப் பருவம் சிறப்பு மிக்கது . வாரா திருந்தால் இனிநான் உன்      வடிவேல் விழிக்கு மைஎழுதேன்  மதிவாள் நுதற்குத் திலகமிடேன்      மணியால் இழைத்த பணிபுனையேன்  பேரா தரத்தினொடு பழக்கம்      பேசேன்; சிறிதும் முகம்பாரேன்  பிறங்கு சுவைப்பால் இனிதூட்டேன்      பிரியமுடன் ஓக்கலையின் வைத்துத்  தேரார் வீதி வளம் காட்டேன்      செய்யக் கனிவாய் முத்தமிடேன்; திகழு மணித்தொட்டிலில் ஏற்றித்      திருக்கண் வளரச் சீராட்டேன்; தாரார் இமவான் தடமார்பில்      தவழும் குழந்தையாய் வருகவே  சாலிப் பதிவாழ் காந்திமதித்    ...

முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ்

      இந்நூலையும் குமரகுருபரரே பாடினார்.  குமரகுருபரர் தருமபுரம் சென்று அங்கிருந்த மாசிலாமணி தேசிகரிடம் ஞானோபதேசம் பெற விரும்வினார்.  தேசிகரின் விருப்பப்படி சிதம்பரம் செல்லப் புறப்பட்ட குமரகுருபரர் வழியில் வைத்தீஸ்வரன் கோயிலை அடைந்தார்.  அங்கே எழுந்தருளி இருக்கும் குமரக் கடவுளைக் கண்டு, காதல் மீதூறத் தொழுது, பின்பு அவர் மீது 'முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்' பாடினார்.      வைத்தீஸ்வரன் கோயில் என்று இன்று வழங்கப்பெறும் ஊரின் பழைய பெயர், புள்ளிருக்கு வேளூர் என்பதாகும்.  சம்பாதி, சடாயு, இருக்கு வேதம், குமரக் கடவுள், சூரியன் ஆகியோர் சிவபிரானை வழிபட்ட தலமே புள்ளிருக்கு வேளூர் ஆகும்.  இங்குள்ள சிவன் கோயிலில் முத்துக் குமாரசாமி சந்நிதி உள்ளது.  குமரகுருபரர் இம்முத்துக் குமாரசுவாமியின் பெருமைகளை 'முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்' நூலில் விளங்கக் கூறியுள்ளார்.     முத்துக்குமரன், முக் கண்ணணோடு விளையாடும் போது செய்யும் சிறு குறும்புச் செயல்களைப் படிப்பவர் களி கூரக் கூறுகின்றார் குமரகுருபரர்.  குமரன் தந்தையின் மார்பில் ...

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

      ஐந்தாண்டு வரை பேசாத ஊமைக் குழந்தையாயிருந்து பின்னர் தமிழ் வெள்ளம் பெருகிப் பாடும் பாடல்கள் பாடித் தமிழை வளர்த்த பெரும் புலவர் குமர குருபரர்.  இவர் கி.பி. 17ம் நூற்றாண்டில் பிறந்தார்.  இவர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழே, பிள்ளைத் தமிழ் நூல்களில் தலைசிறந்தது.  திருமலை நாயக்கர் முன்னிலையில் குமரகுருபரர் இந்நூலை அரங்கேற்றும்போது, மீனாட்சியம்மையே சிறுமி வடிவில் அவைக்கு வந்து இந்நூலைக் கேட்டு அகமகிழ்ந்து அருள் புரிந்தாள் எனக் கூறுவர் . முத்தப் பருவத்தில், காலத் தொடுகற் பனை கடந்த      கரு வூலத்துப் பழம் பாடல்  கலைமாச் செல்வர் தேடி வைத்த      கடவுள் மணியே ..... எனத்தொடங்கும் பாடலைக் குமரகுருபரர் அரங்கேற்றுகையில் குழந்தையாய் வந்த மீனாட்சியம்மை, தம் கழுத்திலிருந்த முத்து மாலையைக் கழற்றிக் கவிஞர்க்கு அணிவித்து மறைந்து விட்டாள் என்பர். இந்நிகழ்ச்சி, தொடுக்கும் கடவுட் பழம்பாடல்      தொடையின் பயனே நறைபழுத்த  துறைத்தீந் தமிழின் ஒழுகுநறும்      சுவையே அகந்தைக் கிழங்கையகழ்ந்து  எடுக்கும்...

பிள்ளைத் தமிழ்

     தான் போற்றும் தெய்வத்தையோ அரசனையோ, சான்றோரையோ குழந்தையாக்கிப் பார்த்துப் பரவசத்துடன் பாடப்படும் சிற்றிலக்கியம், "பிள்ளைத் தமிழ்".  இதனைப் பிள்ளைப் பாட்டு என்றும், பிள்ளைக்கலி என்றும் வழங்குவது உண்டு.     குழந்தையின் மூன்றாம் திங்கள் முதல் இருபத்தோராம் திங்கள் வரை, இரண்டு திங்களுக்கு ஒரு பருவமாகப் பகுத்துக் கொள்வது மரபு.  எனவே மூன்று, ஐந்து , ஏழு, ஒன்பது, பதினொன்று, பதிமூன்று, பதினைந்து, பதினேழு, பத்தொன்பது, இருபத்தொன்று எனப் பத்துப் பருவங்கள் அமையும்.     அவ்வப் பருவத்தில் குழந்தைக்கு இயல்பாக உள்ள நிலை, செயல், தன்மை முதலியவற்றை அமைத்துப் பாடுவர் .  இப்பிள்ளைத் தமிழ் ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரு வகைப்படும்.     காப்புப் பருவம், தாலப் பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப்பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், சிறுபறைப் பருவம், சிற்றில் பருவம், சிறுதேர்ப் பருவம், என்னும் பத்தும் ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குரியன, இதை  சாற்றறிய காப்ப தால் செங்கீரை சப்பாணி  மாற்றரிய முத்தமே வார...