கி.மு. 500 - கி.பி.100 'திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் பொங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழ்' என்கிறார், பாவேந்தர் பாரதிதாசன். 'என்றுமுள தென் தமிழ்' என்பதும் இதே கருத்தையே தருகிறது. தமிழ் இல்லாத காலம் இத்தரணியில் இல்லை என்பதே சான்றோர்களின் துணிவு. உலகின் முதல் மொழியாக, அல்லது உலகில் தோன்றிய சில மொழிகளில் ஒரு மொழியாக - உயர்ந்த மொழியாகத் தமிழ் விளங்குகிறது. தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ் கலைவாணர்களும் என்று பிறந்தவள் என்றுணர முடியாத இயல்பை - ஏற்றத்தைப் பெற்றவள், தமிழ்த் தாய். தரணியின் மூத்த மொழியாய்த் தமிழ் திகழ்ந்தமையால், உலகத்தின் தொன்மை மொழிகள் பலவற்றிலும் தமிழ் மணம் வீசக் காண்கிறோம். கிரேக்கம், ரோம், எகிப்து முதலிய மேற்றிசை நாடுகளுடனும் சீனம், மலேயா, ஜாவா முதலிய கீழ்த்திசை நாடுகளுடனும் தமிழர் தொன்றுதொட்டே வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். தமிழகத்தின் முத்து, மிளகு முதலான பொருள்களை வாங்குவதில் ஆண்டுதோறும் குறைந்த அளவு 55,000,000 தங்க நாணயங்களை (4,86,9...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.