முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 23, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நம்மாழ்வார் - மதுரகவியாழ்வார் - திருமங்கையாழ்வார்

  நம்மாழ்வார்      ஆழ்வார்களுள் மிகவும் போற்றப்படுபவர், நம்மாழ்வார்.  இவர் மாறன் காரிக்கும், உடைய நங்கைக்கும் மகவாகத் திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரில் பிறந்தார்.  பிறப்பு முதலே யோகத்தில் ஆழ்ந்து பதினாறாண்டுகள் ஒரு புளிய மரத்தடியில் இருந்தார்.  இவருக்குச் சடகோபன், காரிமாறன், வகுளாபரணன், பராங்குசன் என்னும் பெயர்கள் உள்ளன.     இவரது காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு.  இந்நூற்றாண்டில் வாழ்ந்த பராந்தகன் நெடுஞ்சடையன் காலத்தில் அமைச்சராய்த் திகழ்ந்த மாறன் காரியே நம்மாழ்வாரின் தந்தை எனவும் கூறுவர்.  நம்மாழ்வார் 35 ஆண்டுகள் வாழ்ந்தனர் எனது தெரிகிறது.     மதுரகவி வடநாட்டில் அயோத்தியில் இருந்தபோது நம்மாழ்வார் தோற்றத்தை அறிந்து தென்னாட்டுக்கு வந்தார்.  இவர் நம்மாழ்வாருக்குச் சேவை செய்து, ஆழ்வார் அருளிய திருவாய் மொழியை ஓலைச் சுவடியில் எழுதி வைத்தார்.     நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி, திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி ஆகியன முறையே சாமவேதம், யஜுர் வேதம், ரிக்கு வேதம், அதர்வண வேதம் ஆகியவற்றின் சாரம...