முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 14, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூவருலா

      விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராசன் சோழன் உலா ஆகிய மூன்றும் மூவருலா என வழங்கப் பெறும் மூன்றையும் இயற்றியவர் ஒட்டக்கூத்தர்.     கலம்பகங்களில் நந்திக் கலம்பகம் தமிழக வரலாறு கூறும் நூலாகத் திகழ்வது போல, உலா நூல்களில் மூவருலா வரலாற்று நூலாக அமைந்துள்ளது.     விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூவர் அவையிலும் வீற்றிருந்த பேறு பெற்றவர், ஒட்டக்கூத்தர்.  இதனால் சோழர் வரலாற்றைத் துல்லியமாக அறியும் வாய்ப்புக் கிடைத்தது.  தாமறிந்த வரலாற்றை இம்மூன்று உலாக்களிலும் தொடுத்து, சோழர் வரலாற்றுக் களஞ்சியமாக இவற்றை மாற்றிவிட்டார்.     பாட்டுடைத் தலைவர்கள் இவர்க்குத் தக்கபடி பரிசளித்தனர்.  இராசராச சோழன் உலாவை அரங்கேற்றிய போது , ஒவ்வொரு கண்ணிக்கும் அவ்வரசன் ஆயிரம் பொன் பரிசாகக் கொடுத்தான்.  மற்றொரு வேந்தன் அரிசிலாற்றங்கரையிலிருந்த ஓர் ஊரை இவருக்குப் பரிசாக அளித்தான்.  அவ்வூர் கூத்தனூர் என்று இவர் பெயரால் வழங்கி வருகின்றது.      மூவருலாவின் வரலாற்றுச் சிறப்பினைப் பின்வரு...

திருக்கைலாய ஞான உலா

 திருக்கைலாயத்தில் நிகழ்ந்த சிவபெருமானின் உலாவைப் புகழ்ந்து பாடும் நூலே திருக்கைலாய ஞான உலாவாகும்.  முதலில் தோன்றிய உலா இதுவே என்பதால் இதனை 'ஆதி உலா' என்றும் கூறுவர் .     இந்நூலை இயற்றியவர் சேரமான் பெருமாள் நாயனார் . இவரது இயற்பெயர் பெருமாக் கோதையார் .     சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் நண்பராவார்.  இவர் பொன் வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக்கைலாய ஞான உலா ஆகிய மூன்று சிற்றிலக்கியங்கள் இயற்றியுள்ளார்.     சுந்தரராகிய நம்பி ஆரூரர் இறைவனால் அனுப்பப்பட்ட வெள்ளை யானையில் ஏறிக் கைலை அடைந்தார்.  சேரமான் பெருமாள் தம் குதிரையில் ஏறிச் சென்று கைலையடைந்தார்.  சேரமான் பெருமாள் தம் குதிரையில் ஏறிச் சென்று கைலையடைந்தார்.  அங்கே சிவபெருமானின் திருமுன்னர் தமது 'திருக்கைலாய ஞான உலா' வை அரங்கேற்றினார்; இவ்வுலா சைவத் திருமுறைகளில் பதினோராந் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.     சிவபெருமான் உலா வரும் தெருக்களில் உள்ள உயர் மாடங்கள், சிவபெருமான் வடிவினைப் பெற்றுத் திகழ்வதாகச் சேரமான் கூறுகின்றார்.

உலா

      தலைவன் வீதியில் உலா வர, அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை , தெரிவை, பேரிளம் பெண் என்னும் ஏழு வகைப் பருவ மகளிரும் கண்டு காதல் கொள்வதைக் கூறுவது உலா என்னும் சிற்றிலக்கியமாகும். இது கலிவெண்பாவால் பாடப்பெறும்.  இவ்வாறு காதல் கொள்ளுதல் பரத்தையர்க்கன்றிக் குலமகளிர்க்குக் கூறப்படாது என்று நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார்.  'பெருங்கதை' காப்பியமும், 'உத்தம மகளிர் ஒழிய மற்றைக்  கன்னியர் எல்லாம் காமன் துரந்த  கணையுளம் கழியக் கவினழிவு ' எய்தி வருந்தியதாகக் கூறும்.  எனவே உலா கண்டு காதல் கொள்ளும் மகளிர் குலமகளிர் அல்லர் என்பது தெளிவு.     ஏழு பருவத்தின் வயது முறையைப் பின்வருமாறு கூறுவர் , பேதை 5 - 7, பெதும்பை 8 - 11, மங்கை 12 - 13, மடந்தை 14 - 19, அரிவை 20 - 25 , தெரிவை 26- 32, பேரிளம் பெண் 33 - 40 ஆண்டுகள்.     இவ்விலக்கியத்தில், பாட்டுடைத் தலைவன் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி உலா வரல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை எனவும், ஏழு பருவ மாதர் கூடித் தனித் தனியாகக் கூறுவன  உலாவின் ப...

தக்கயாகப் பரணி

      'தக்கயாகப் பரணியை இயற்றிய ஒட்டக்கூத்தர் சோழப் பேரரசர்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர்.  'கவிராட்சசன் ' எனப் புகழப்படும் இவர், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், காங்கேயன் நாலாயிரக் கோவை, மூவருலா முதலிய வேறு நூல்களையும் இயற்றியுள்ளார்.  இவர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் .     தக்கனும், திருமால், பிரமன், இந்திரன், முதலான தேவரும் போரிட, அவர்களை எதிர்த்து வீரபத்திர தேவர் போரிட்டுப் பெற்ற வெற்றியைக் கூறுகின்றது, தக்கயாகப் பரணி.     தமிழ் வல்ல ஒட்டக்கூத்தர் தம் பரணியில், தமிழ் முனிவரான அகத்தியரைச் சிறப்பிக்கும் பகுதி அறிந்து இன்புறுவதற்குரியது!  'வரதன் ஒரு தமிழ் முனிவரன் ' என்கின்றார் கூத்தர்.  வீரபத்திரத் தேவரின் பேய்க் கணங்கள், போர்க்காலத்தில் தமிழ்த் தெய்வமான அகத்தியருக்குத் தீங்கு நேரக் கூடாது என்பதற்காக, அவரைப் பிடித்து தமிழ்ப் பொதிய மலைக்குக் கொண்டு போய் , அங்குள்ள குகைக்குள் செல்ல அடைத்ததை "அகத்தியமைத் தமிழ்ப் பொதியிற் குகைப் புக விட்டடைத்தே " எனக் கூறுகின்றார்.  நூலை முடிக்கும் போதும். 'வாழி தமிழ்ச் சொற் றெரிந்த நூற...