முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 16, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குண்டலகேசி

       ஐம்பெருங் காப்பியங்களுள் மணிமேகலையைப் போலக் குண்டலகேசியும் பௌத்த காப்பியம் ஆகும். சிலம்பு, சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றும் சமணக் காப்பியங்கள். குண்டலகேசி சமய வாதம் பேசும் காப்பியமாகும். இக்காப்பியம் கிடைக்கவில்லை. பழைய உரையாசிரியர்கள் இக்காப்பியக் கவிதைகளைத் தம் நூல்களில் மேற்கோளாக எடுத்துக் காட்டியுள்ளனர். அப்பாடல்களைக்  கொண்டும், அவை பயன்படுத்தப்பட்ட நூல்களைக் கொண்டும், குண்டலகேசி கி.பி. எட்டாம் நூற்றாண்டில் எழுந்த நூல் எனக் கூறுவர்.       குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார்.  இவர் பௌத்த மதத்தினர்.  சமண சமயக் கொள்கைகளை மறுப்பதற்காகவே இவர் இக்காப்பியம் செய்தார்.      பத்தரை என்பவள் வணிகன் பெற்ற பாவை. களவுக்காகக் காவலில் இருந்த காளன் என்னும் வைசிய புத்திரனைக் கண்டு காதல் கொண்டாள்; தந்தையின் துணையால் அவனை மீட்டு மணந்து கொண்டாள். இருவரும் இல்லற இன்பம் துய்த்து இனிதிருந்த காலத்தில் ஒருநாள் ஊடற் காலத்தில் "நீ கள்வன் அன்றோ" என்று சினந்து பேசினாள் பத்தரை. அதனால் சினம் கொண்ட காளன் அவளை வஞ்சகமாக மலை உச்சிக்கு அழைத்துச் ச...