முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 27, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ்

      இந்நூலையும் குமரகுருபரரே பாடினார்.  குமரகுருபரர் தருமபுரம் சென்று அங்கிருந்த மாசிலாமணி தேசிகரிடம் ஞானோபதேசம் பெற விரும்வினார்.  தேசிகரின் விருப்பப்படி சிதம்பரம் செல்லப் புறப்பட்ட குமரகுருபரர் வழியில் வைத்தீஸ்வரன் கோயிலை அடைந்தார்.  அங்கே எழுந்தருளி இருக்கும் குமரக் கடவுளைக் கண்டு, காதல் மீதூறத் தொழுது, பின்பு அவர் மீது 'முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்' பாடினார்.      வைத்தீஸ்வரன் கோயில் என்று இன்று வழங்கப்பெறும் ஊரின் பழைய பெயர், புள்ளிருக்கு வேளூர் என்பதாகும்.  சம்பாதி, சடாயு, இருக்கு வேதம், குமரக் கடவுள், சூரியன் ஆகியோர் சிவபிரானை வழிபட்ட தலமே புள்ளிருக்கு வேளூர் ஆகும்.  இங்குள்ள சிவன் கோயிலில் முத்துக் குமாரசாமி சந்நிதி உள்ளது.  குமரகுருபரர் இம்முத்துக் குமாரசுவாமியின் பெருமைகளை 'முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்' நூலில் விளங்கக் கூறியுள்ளார்.     முத்துக்குமரன், முக் கண்ணணோடு விளையாடும் போது செய்யும் சிறு குறும்புச் செயல்களைப் படிப்பவர் களி கூரக் கூறுகின்றார் குமரகுருபரர்.  குமரன் தந்தையின் மார்பில் ...

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

      ஐந்தாண்டு வரை பேசாத ஊமைக் குழந்தையாயிருந்து பின்னர் தமிழ் வெள்ளம் பெருகிப் பாடும் பாடல்கள் பாடித் தமிழை வளர்த்த பெரும் புலவர் குமர குருபரர்.  இவர் கி.பி. 17ம் நூற்றாண்டில் பிறந்தார்.  இவர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழே, பிள்ளைத் தமிழ் நூல்களில் தலைசிறந்தது.  திருமலை நாயக்கர் முன்னிலையில் குமரகுருபரர் இந்நூலை அரங்கேற்றும்போது, மீனாட்சியம்மையே சிறுமி வடிவில் அவைக்கு வந்து இந்நூலைக் கேட்டு அகமகிழ்ந்து அருள் புரிந்தாள் எனக் கூறுவர் . முத்தப் பருவத்தில், காலத் தொடுகற் பனை கடந்த      கரு வூலத்துப் பழம் பாடல்  கலைமாச் செல்வர் தேடி வைத்த      கடவுள் மணியே ..... எனத்தொடங்கும் பாடலைக் குமரகுருபரர் அரங்கேற்றுகையில் குழந்தையாய் வந்த மீனாட்சியம்மை, தம் கழுத்திலிருந்த முத்து மாலையைக் கழற்றிக் கவிஞர்க்கு அணிவித்து மறைந்து விட்டாள் என்பர். இந்நிகழ்ச்சி, தொடுக்கும் கடவுட் பழம்பாடல்      தொடையின் பயனே நறைபழுத்த  துறைத்தீந் தமிழின் ஒழுகுநறும்      சுவையே அகந்தைக் கிழங்கையகழ்ந்து  எடுக்கும்...

பிள்ளைத் தமிழ்

     தான் போற்றும் தெய்வத்தையோ அரசனையோ, சான்றோரையோ குழந்தையாக்கிப் பார்த்துப் பரவசத்துடன் பாடப்படும் சிற்றிலக்கியம், "பிள்ளைத் தமிழ்".  இதனைப் பிள்ளைப் பாட்டு என்றும், பிள்ளைக்கலி என்றும் வழங்குவது உண்டு.     குழந்தையின் மூன்றாம் திங்கள் முதல் இருபத்தோராம் திங்கள் வரை, இரண்டு திங்களுக்கு ஒரு பருவமாகப் பகுத்துக் கொள்வது மரபு.  எனவே மூன்று, ஐந்து , ஏழு, ஒன்பது, பதினொன்று, பதிமூன்று, பதினைந்து, பதினேழு, பத்தொன்பது, இருபத்தொன்று எனப் பத்துப் பருவங்கள் அமையும்.     அவ்வப் பருவத்தில் குழந்தைக்கு இயல்பாக உள்ள நிலை, செயல், தன்மை முதலியவற்றை அமைத்துப் பாடுவர் .  இப்பிள்ளைத் தமிழ் ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரு வகைப்படும்.     காப்புப் பருவம், தாலப் பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப்பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், சிறுபறைப் பருவம், சிற்றில் பருவம், சிறுதேர்ப் பருவம், என்னும் பத்தும் ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குரியன, இதை  சாற்றறிய காப்ப தால் செங்கீரை சப்பாணி  மாற்றரிய முத்தமே வார...

அழகர் கிள்ளை விடு தூது

       திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளியுள்ள சௌந்தரராகவாப் பெருமாள் பவனி வரும்போது கண்டு காதல் கொண்ட தலைவி கிள்ளையைத் தூது விட்டதாக அமைந்த நூலே 'அழகர் கிள்ளை விடு தூது'.  இதனைப் பாடியவர், பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.  இந்த நூலில் கிள்ளையின் பெருமையைக் கூறும் பகுதி நெஞ்சையள்ளும் சுவைமிக்கது. பால்குடிக்கும் பச்சைக் குழந்தை நீ யானாலும்  கால்பிடிப்பார் கோடிப்பேர் கண்டாயே - மால்பிடித்தோர்  கைச்சிலை வேலால் வருந்தும் காமநோய் தீர்ப்பதற்கோ  பச்சிலை ரூபம் படைத்திருந்தாய். வண்டுவிடு தூது       திருவாடுதுறை ஆதினத்தைச் சார்ந்த கச்சியப்ப முனிவர் இயற்றியது, 'வண்டு விடு தூது'.  இது காஞ்சி புரத்திலுள்ள ஆனந்தபுரத்திலுள்ள ஆனந்த ருத்திரேசர் மீது காதல் கொண்ட தலைவி வண்டினைத் தூது விடுவதைக் கூறுகின்றது.     ஆனந்தருத்திரேசர் உலா வருவதால் விளையும் நன்மைகளை விளக்கும் பின்வரும் பகுதியைக் கொண்டே நூலின் முழுச் சிறப்பை உய்த்துணரலாம். வானுலகம் மேன்மைபெற மண்ணுலகம் செம்மாப்ப  ஈனஇடர் முற்றும் இரிந்தோட - ஆன  அறம் தழைப்ப அன்பர்...

தமிழ் விடு தூது

    தன் உள்ளத்துக்குகந்த ஒரு பொருளையே தூதுப் பொருளாகத் தேர்ந்தெடுப்பது சிறப்புடைத்து.  தமிழினும் உள்ளத்துகந்த பொருள் எது? அதனால் தமிழ் வளர்க்கும் மதுரையில் குடியிருக்கும்   சொக்கநாதர் மீது மிக்க காதல் கொண்ட காரிகை, தன்  காதல் நோயை அவரிடம் தக்கபடி உரைத்து  தமிழைத் தூது விட்டாள்.  அதுவே 'தமிழ் விடு தூது'.     'தமிழ் விடு தூது' என்னும் சிறந்த தூது நூலை இயற்றியவர் இன்னார் என்பது தெரியவில்லை.  தமிழையே உணவாய், உணர்வாய், உயிராய்க் கொண்ட தண்டமிழ்ப் பக்தர் - தாய் மொழிப் பித்தர் இந்தக் கவிஞர் என்பது தெரிகின்றது. செந்தமிழும் சைவமும் இரு விழிகளாய்க் கொண்ட வர் இந்த கவிஞர் என்பதும் புரிகின்றது.  இவரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என்று கூற முடிகிறதேயன்றி, இவர் காலத்தை உறுதியாகக் கூற இயலவில்லை.     தலைவி தமிழின் பெருமையைக் கூறும் பகுதி தமிழ் மொழியின் வரலாற்றையே உள்ளடக்கியதாகவுள்ளது.     முதலில் சிவபிரான், தடாதகைப் பிராட்டியார், விநாயகர், முருகன் ஆகிய நால்வருக்கும் நூல் வணக்கம் தெரிவிக்கின்றது....

தூது

       சிற்றிலக்கியங்களில் ஒன்றான 'தூது' தொல்காப்பியக் காலத்தும் இலக்கியப் பிரிவாக இருந்த ஒன்று. ஒருவரிடம் ஒரு பொருளைப் பெற்று வருவதற்கு ஆற்றல் மிக்க மற்றொருவரை அனுப்புவது தூது.  போர்க்காலத்தே மன்னர் தூதனுப்புவது பண்டைய மரபு. ஒளவையாரும் அதிகமானின் தூதராகத் தொண்டைமானைக் கண்டு வந்ததைப் புறநானூறு உணர்த்தும்.  இது புறத்திணை சார்ந்த தூது.     அகத்திணை சார்ந்த தூது, "காமம் மிக்க கழிபடற்கிளவி" யாகவே அமைந்துள்ளது.  அஃறிணைப்  பொருள்கள் தாம் கூறுவனவற்றைப் பிறரிடம் கூறும் ஆற்றலோ, அவர் கூறும் விடையை அறிந்து வந்து கூறும் ஆற்றலோ,  அற்றவை.  இதை உணர்ந்தும் தமது காதல் உணர்வின் மிகுதியினால் அஃறிணைப் பொருள்களைக் காதல் தூதாக அனுப்புதல் வழக்கமாகும். இதனை இலக்கணம் ஏற்றுக் கொண்டது. 'சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச்  செய்யா மரபில் தொழில்படுத் தடக்கியும்' என்று தொல்காப்பியமும், 'கேட்குந போலவும் கிளக்குந போலவும்  இயக்குந போலவும் இயற்றுந போலவும்  அஃறிணை மருங்கினும் அறையப் படுமே' என்று நன்னூலும் கூறுகின்றன.     தற்போதுள்ள நூல்களில் ...