முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அழகர் கிள்ளை விடு தூது

     திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளியுள்ள சௌந்தரராகவாப் பெருமாள் பவனி வரும்போது கண்டு காதல் கொண்ட தலைவி கிள்ளையைத் தூது விட்டதாக அமைந்த நூலே 'அழகர் கிள்ளை விடு தூது'.  இதனைப் பாடியவர், பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.  இந்த நூலில் கிள்ளையின் பெருமையைக் கூறும் பகுதி நெஞ்சையள்ளும் சுவைமிக்கது.

பால்குடிக்கும் பச்சைக் குழந்தை நீ யானாலும் 

கால்பிடிப்பார் கோடிப்பேர் கண்டாயே - மால்பிடித்தோர் 

கைச்சிலை வேலால் வருந்தும் காமநோய் தீர்ப்பதற்கோ 

பச்சிலை ரூபம் படைத்திருந்தாய்.

வண்டுவிடு தூது 

    திருவாடுதுறை ஆதினத்தைச் சார்ந்த கச்சியப்ப முனிவர் இயற்றியது, 'வண்டு விடு தூது'.  இது காஞ்சி புரத்திலுள்ள ஆனந்தபுரத்திலுள்ள ஆனந்த ருத்திரேசர் மீது காதல் கொண்ட தலைவி வண்டினைத் தூது விடுவதைக் கூறுகின்றது.

    ஆனந்தருத்திரேசர் உலா வருவதால் விளையும் நன்மைகளை விளக்கும் பின்வரும் பகுதியைக் கொண்டே நூலின் முழுச் சிறப்பை உய்த்துணரலாம்.

வானுலகம் மேன்மைபெற மண்ணுலகம் செம்மாப்ப 

ஈனஇடர் முற்றும் இரிந்தோட - ஆன 

அறம் தழைப்ப அன்பர் அகம்தழைப்ப அன்பின் 

திறம் தழைப்பச் செல்வம் தழைப்ப - மறந்தழைத்த 

வேற்கணார் உள்ளம் விடை கொள்ள நல்லுலா 

ஏற்குமா கொள்ள இனிதுறீஇ .



 



 

    








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...