முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 9, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருஞான சம்பந்தர்

            சோழ நாட்டில் சீகாழியில் தோன்றியவர், நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர். அந்தணர் குலத்தில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் பிறந்தவர்.  இவர் ஆளுடைய பிள்ளையார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். மூன்றாண்டுப் பிள்ளையாக இருந்த போதே, உமாதேவியாரின் ஞானப் பாலைப் பருகித் தோடுடைய செவியன்' எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்.  அது முதல் சிவபெருமான் உறையும் திருத்தலங்கள் பலவற்றுக்கும் சென்று பதிகங்களைப் பண்ணமையைப் பாடிச் சைவ நெறியையும் செந்தமிழ் இலக்கியத்தையும் வளர்த்து வந்தார்.     சம்பந்தர் காலத்தில், பாண்டிய நாட்டை ஆண்ட நெடுமாறன் சமண சமயத்தவனாய் இருந்தான்.  பாண்டிமாதேவி மங்கையற்கரசியின் வேண்டுகோளின் படி சம்பந்தர் பாண்டிநாடு சென்று நெடுமாறனின் வெப்பு நோயினை "மந்திரமாவது நீறு" என்னும் பாடல்படி , நீரணிவித்து நீக்கினார்.  அனல் வாதம், புனல் வாதம் முதலியன புரிந்து சமணரை வென்றார்.     திருநாவுக்கரசர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், சிறுத்தொண்டர் முதலிய தம் காலத்து அடியார்களைக் கண்டு, பழகி மக...

பல்லவர் காலம் கி.பி.600-850

  பக்தி இலக்கியங்கள்      சங்க  காலத்துக்குப் பின்னே தமிழகத்தைக் களப்பிரர் கைப்பற்றி ஆண்டனர்.  தமிழ்நாடு அடிமைப்பட்டதுடன் தமிழ்மொழியும், தமிழர் சமயங்களும், தமிழர் கலைகளும் அடிமைப்பட்டன;  ஆதிக்கம் இழந்தன.  இந்நிலையில் பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் புகுந்து செங்கோல் செலுத்தின.     கி.பி. நான்காம் நூற்றாண்டில் தென்னாட்டுக்கு வருகை தந்தார் பாஹியான் என்னும் சீனர்.  அக்காலத்தில் தென்னாட்டில் பல்லவர் ஆட்சி முளைத்து விட்டிருந்தது.  பாஹியான், குண்டூர் மாவட்டத்திலுள்ள நாகார்ச்சுன குண்டாவில் பெரிய புத்த விகாரம் இருந்ததைக் குறிப்பிடுகிறார்.  கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஹியூன் சுவாங் என்னும் மற்றொரு சீனர் தென்னாட்டுக்கு வந்தார்.  அவர் ஆந்திர நாட்டில் சுமார் இருபது பௌத்த பள்ளிகளையும் அவற்றில் சுமார் மூவாயிரம் பூத்தத் துறவிகளையும் பார்த்ததாக எழுதியுள்ளார்.  காஞ்சி மாநகரத்தில் அதைச் சுற்றிலும் புத்த மதம் செழிப்புற்று விளங்கியதை அவர் குறிப்பிடுகிறார்.  காஞ்சிபுரம் தென்னகத்தைப் பொறுத்தவரை புத்த சமயத்துக்குத் தலைமைப் பீடமாகத் தி...