V . நாயக்கர் காலம் கி.பி. 1350 - 1750 சிற்றிலக்கியங்கள் சங்க காலத்தில் குறுகிய அடிகளைப் பெற்ற தனிப் பாடல்களும், நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பாட்டுகளும், பொருள் தொடர்நிலையாக வரும் காப்பியங்களும் பெற்றுச் சிறந்திருந்தது, தமிழ். தனிப் பாடல்களின் தொகுதிகள், எட்டுத் தொகை நூல்கள். பாட்டுகள் பத்தின் தொகுப்பே, பத்துப்பாட்டு. காப்பியங்களாக உருவானவையே சிலம்பும் மேகலையும். தமிழ் மொழியின், இலக்கணத்தை வகுத்த தொல்காப்பியர், ஏற்கனவே இருந்த இலக்கியங்களைக் கண்டு அவற்றிற்கு இலக்கணம் வகுத்ததுடன் அமையாது, எதிர்காலத்தில் தோன்றக்கூடிய புதிய இலக்கியங்களையும் ஏற்றுக் கொள்ளும் வகையில், ' விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'. என்று கூறினார். யாப்பு என்னும் சொல், யாக்கப்படுவது, பிணைக்கப்படுவது என்னும் பொருளுடையது. செய்யுள் என்னும் பொருளுடையது. செய்யுள் என்னும் சொல்லின் பொருளும் இதுவே. எழுத்து, சொல் முதலிய உறுப்புகளால் அகத்திணை, புறத்திணைக்கு இடமாக இயற்றப்படுதலின் இது யாப்பு எனப்பட்டது....
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.