முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நற்றிணை

           குறுந்தொகை அடிகளிலும் மிக்கு, ஒன்பதடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டடிப் பேரெல்லையும் கொண்ட பாடல்களின் தொகுதி நற்றிணை.  திணை என்னும் சொல் ஆகுபெயராய் அகத்திணை நூலைக் குறிக்கிறது. ' திணை எழுபது' முதலிய நூற்பெயரிலும் இத்தன்மையைக் காணலாம்.  சிறிய பாடல்களும் இன்றிப் பெரிய பாடல்களும் இன்றி அளவான பாடல்களைப் பெற்றமையால் இத்திணை, நல் என்னும் அடைமொழி பெற்று 'நற்றிணை'யாயிற்று, என்பர்.  இதன்கண் கடவுள் வாழ்த்து நீங்கலாக 400 பாடல்கள் உள்ளமையால் இது 'நற்றிணை நானூறு' எனவும் வழங்கப்பட்டது.  எனினும் 234 ஆம் பாடல் எனச் சிலரும், இறையனார் அகப் பொருள் உரையில் மேற்கோளாக வரும், 'சான்றோர் வருந்திய வருத்தமும்' எனத் தொடங்கும் பாடலே மறைந்து போன நற்றிணைப் பாடல் எனச் சிலரும் கூறுவர்.  385 ஆம் பாடலின் பிற்பகுதி மறைந்து போனது.  56 பாடல்களைப் பாடிய புலவர்கள் பெயர் தெரியவில்லை.      நற்றிணையைத் தொகுப்பித்தவன், பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.  தொகுத்தவர் பெயர் ஏட்டில் இல்லை.  நற்றிணையை 1914-இல் உரை எழுதிப் பதிப்பித்தவர், பி...

குறுந்தொகை

     எட்டுத் தொகை நூலில் முதலில் தொகுக்கப்பட்ட நூல், இது.  இதற்குக் 'குறுந்தொகை நானூறு' என்றும் பெயர் இருந்ததை இறையனார் களவியல் உரையால் அறியலாம்.  இதன் சிற்றெல்லை நான்கு அடி; பேரெல்லை எட்டடி.      தற்போது கிடைக்கும் நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்கள் உள்ளன.  307, 391 ஆகிய இரு பாடல்களும் குறுந்தொகையின் பேரெல்லையை மீறி ஒன்பது அடிகள் பெற்றுள்ளன.  391 ஆம் பாடல் சில பாட பேதங்களுடன் எட்டடியாகச் சில ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது.  307 ஆம் பாடல் எல்லா ஏடுகளிலும் ஒன்பது அடி கொண்டதாகவே அமைந்துள்ளது.  எனவே இப்பாடலை நீக்கினால் ' குறுந்தொகை நானூறு' என்னும் பெயர் பொருத்தமாக அமைகிறது.      'இத்தொகை முடித்தான் பூரிக்கோ, இத் தொகை பாடிய கவிகள் இரு நூற்றைவர்' என்னும் பழங் குறிப்பு நூலின் இறுதியில் காணப்படுகிறது.  குறுந்தொகையின் 380 பாடலுக்குப் பேராசிரியர் உரை வகுக்க.  எஞ்சிய 20 பாடலுக்கு நச்சினார்க்கினியர் உரை வழங்கினார்.  இதை, " நல் அறிவுடைய தொல் பேராசான் கல்வியும் காட்சியும் காசினி அறிய  பொருள்த...

தொகைநூல் வரலாறு

      ஒரு மொழி தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளின் வளர்ச்சிக்குப் பின்னரே இலக்கண அமைதி நிறைந்த பாட்டுத் தோன்ற முடியும்.  பலர் எழுதிய பல நூறு பாடல்களைத் திரட்டி ஒரு குறிப்பிட்ட வரையறையுடன் தொகுத்துத் தொகை நூலாக்க இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் பிடிக்கும்.  தொகை நூல்களின் தேவையை முற்றிலும் உணர்ந்து கதைகள், கவிதைகள், அறிவியல் கட்டுரைகள், பழமொழிகள், பொன்மொழிகள் முதலிய தொகை நூல்கள் ஒவ்வொரு மொழியிலும் எண்ணிறந்தன எழுந்த காலம் இருபதாம் நூற்றாண்டே.  தொகை நூல் என்பது ஒரு மொழியின் இலக்கிய ஏற்றத்தைக் காட்டும் இமயச் சிகரமாகும்.  தமிழில் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பே செம்மை வாய்ந்த தொகை நூல்கள் தோன்றின.  அவை மொத்தம் எட்டு. " நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்(று) இத்திறத்த எட்டுத் தொகை" என்னும் வெண்பா, எட்டுத்தொகை நூல்களின் பெயர்களை எடுத்துரைக்கிறது.      இவ்வெட்டினுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் அகப்பொருள் உரைப்பன.  புற...

சங்க இலக்கியம்

     ' தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று பாடினார் நாமக்கல் கவிஞர்.  தமிழனைத் தலைநிமிர்த்தி நிற்குமாறு செய்வதே சங்க இலக்கியந்தான்.  இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும், காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும் கூறுவர்.  இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையைக் கற்பனைக் கலப்பின்றிப் படம் பிடிக்கும் அற்புதக் கண்ணாடியே சங்க இலக்கியம்.      எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததையும், முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததையும், அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள் வளர்ந்து சிறந்ததையும், உரைக்கிறது சங்க இலக்கியம். அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிவுற்றதையும், அவர் கன்னியராகி நிலவினில் ஆடிக் களித்தத்தையும், மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததையும், அவர் தங்கமதலைகள் ஈன்று அமுதூட்டித் தழுவியதையும் விழுமியமுறையில் விளக்குவது சங்க இலக்கியம்.      பண்டைய தமிழ் நாட்டின் மண்ணையும் விண்ணையும், மக்களையும், மாக்களையும், பயிர்களையும், உயிர்களையும், மலையையும், கலையையும் அவற்றின் தோற்றத...

தொல்காப்பியம்

      தொன்மைத் தமிழில் தோன்றிய நூல்களில் இன்று நமக்குக் கிடைப்பனவற்றுள் மிக மிகத் தொன்மையானது தொல்காப்பியம்.  எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள் முதலிய நூல்களுக்குக் காலத்தால் மூத்தது, தொல்காப்பியம்.      தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல்.  இதனை இயற்றிய தொல்காப்பியர், அகத்தியரின் பன்னிரு மாணவர்களில் ஒருவர் என்பவர்.     இக்கூற்றிற்குப்    போதிய சான்றுகள் இல்லை.  வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ் கூறும் நல்லுலகத்தில் வழங்கிய பேச்சு மொழியினையும் இலக்கிய மரபினையும் ஆராய்ந்து, தமக்கு முன்னேயிருந்த இலக்கிய நூல்களைக் கற்று எழுத்து,சொல்,பொருள் பற்றி விரிவாகக் கூறும் தொல்காப்பியத்தை இயற்றினார்.  ஒல்காப் பெருமைத் தொல்காப்பியர்.  இந்நூல், நிலந்தரு திருவின் பாண்டியன் அவையில் அதங்கோட்டு ஆசான் முன்னிலையில் அரங்கேறியது.  இச்செய்திகளைத் தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் எழுதிய சிறப்புப் பாயிரம் மூலம் அறிகிறோம்.      சிறப்புப் பாயிரம், "மல்குநீர் வரைப்பின்  ஐந்திரம் நிறைந்த தொல்காப்பி...