முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐங்குறுநூறு

           ஐந்திணை ஒவ்வொன்றுக்கும் நூறு பாடல் வீதம் பெற்ற ஐந்நூறு பாடல்கள் கொண்டது, ஐங்குறுநூறு.  இதன் பாடல்கள் மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்டவை.  ஆசிரியப்பாவின் சிற்றெல்லையே மூன்றடி தான் என்பது இங்கே நினைக்கத் தக்கது; குறுந்தொகையினும் குறுகிய அடிகள் பெற்ற பாக்களைக் கொண்டது என்னும் பொருளில் ஐங்குறுநூறு என்னும் பெயரிடப் பெற்றது.  நூலின் முன்னே கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்று உள்ளது.  இதன் 129, 130 ஆகிய பாடல்கள் மறைந்து போயின.      இத் தொகைநூலைத் தொகுப்பித்தோன் யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.  தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.  இவர் இரும்பொறை ஏவ, ஐந்திணை பாடவல்ல ஐவரை அணுகி, திணைக்கு நூறு பாடல்கள் 3 - 6 என்னும் அடிவரையறைக்குள் பாடுமாறும், நூறு பாடலும் பத்துப் பாடல்கள் கொண்ட பத்துப் பகுதிகளாக அமைத்துக் கொள்ளுமாறும் வேண்டிப் பெற்றுத் தொகுத்தே இத்தொகை நூல்.  தொகுப்பாசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்க மருதத்தை ஓரம் போகியாரும் நெய்தலை அம்மூவனாரும், குறிஞ்சியைக் கபிலரும், பாலைய...

அகநானூறு

     நற்றிணைப் பாடல்களிலும் நெடிய பாடல்களைக் கொண்ட தொகை நூல் அகநானூறு.  இதன் பாடல்களின் அளவு சிறுமை 13 அடி.  பெருமை 31 அடி.  இந்நூல் நெடுந்தொகை நானூறு என்னும் பெயரையே முதலில் பெற்றிருந்தது.  இத்தொகை நூலின் பாயிரமும் 'முன்னர் தொகுத்த நல் நெடுந்தொகைக்கு' என்று குறிப்பிடுகிறது.  அகநானூற்றுப் பாயிரத்தை இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்வதரையன் பாடியுள்ளான்.  பின்னர் அது அகம், அகப்பாட்டு, அகநானூறு என வழங்கப்பட்டது.      நூலைத் தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி; தொகுத்தோன் உப்பூரி குடிகிழான் மகன் உருத்திர சன்மன்.  பூரிக்கோவும் உருத்திரசன்மனும் ஒருவரே என்பதை முன்னர்க் கண்டோம்.  குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களைத் தொகுத்த பின்னர், அந்த அனுபவ முதிர்ச்சியால் உருத்திரசன்மன் இத்தொகை நூலை முப்பிரிவுகளாகப் பிரித்ததோடு குறிப்பிட்ட எண் பெற்ற பாடல் குறிப்பிட்ட திணை பற்றிய பாடலாக அமையுமாறு செய்தான்.  1 முதல் 120 பாடல்கள், 'களிற்றி யானை நிரை' எனவும் 121 முதல் 300 வரையுள்ள 180 பாடல்கள் ' மணிமிடைபவளம்' எனவும், ...