ஐந்திணை ஒவ்வொன்றுக்கும் நூறு பாடல் வீதம் பெற்ற ஐந்நூறு பாடல்கள் கொண்டது, ஐங்குறுநூறு. இதன் பாடல்கள் மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்டவை. ஆசிரியப்பாவின் சிற்றெல்லையே மூன்றடி தான் என்பது இங்கே நினைக்கத் தக்கது; குறுந்தொகையினும் குறுகிய அடிகள் பெற்ற பாக்களைக் கொண்டது என்னும் பொருளில் ஐங்குறுநூறு என்னும் பெயரிடப் பெற்றது. நூலின் முன்னே கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்று உள்ளது. இதன் 129, 130 ஆகிய பாடல்கள் மறைந்து போயின. இத் தொகைநூலைத் தொகுப்பித்தோன் யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை. தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். இவர் இரும்பொறை ஏவ, ஐந்திணை பாடவல்ல ஐவரை அணுகி, திணைக்கு நூறு பாடல்கள் 3 - 6 என்னும் அடிவரையறைக்குள் பாடுமாறும், நூறு பாடலும் பத்துப் பாடல்கள் கொண்ட பத்துப் பகுதிகளாக அமைத்துக் கொள்ளுமாறும் வேண்டிப் பெற்றுத் தொகுத்தே இத்தொகை நூல். தொகுப்பாசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்க மருதத்தை ஓரம் போகியாரும் நெய்தலை அம்மூவனாரும், குறிஞ்சியைக் கபிலரும், பாலைய...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.