பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பின்வரும் வெண்பா கூறுகிறது. ' நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலையும் அம்கீழ்க் கணக்கு ' இந்த வெண்பா எந்த வரிசையில் அவற்றைச் சொல்கிறதோ அதே வரிசையில் கூறுவது மரபு. அவ்வரிசை முறை இது. 1. நாலடியார், 2. நான்மணிக்கடிகை, 3. இனியவை நாற்பது, 4. இன்ன நாற்பது, 5. கார் நாற்பது, 6. களவழி நாற்பது, 7. ஐந்திணை ஐம்பது, 8. திணைமொழி ஐம்பது, 9. ஐந்திணை எழுபது, 10. திணைமாலை நூற்றைம்பது, 11. திருக்குறள் (முப்பால்), 12. திரிகடும், 13. ஆசாரக் கோவை, 14. பழமொழி, 15. சிறுபஞ்சமூலம், 16. முதுமொழிக் காஞ்சி, 17. ஏலாதி, 18. கைந்நிலை அல்லது இன்னிலை . இவற்றுள் நீதி நூல்கள் 11, அகப்பொருள் நூல்கள் 6, புறப்பொருள் நூல் 1. இதே வரிசை முறையில் இவற்றைக் காண்போம். நீதிநூல்கள் 1. திருக்குறள் நீதி நூல்கள் காலத்தால் முற்பட்டது திருக்குறள். இதனை, சங்க காலத்தது என்றும், ச...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.