தொண்டரடிப் பொடியாழ்வார் சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் முன் குடுமிச் சோழிய அந்தணர் குலத்தில் தோன்றியவர் தொண்டரடிப் பொடியாழ்வார். இவரது இயற்பெயர் விப்பிர நாராயணர். இவர் திருவரங்கத்தில் ஒரு நந்தவனம் அமைத்து, திருமாலுக்குப் பூமாலைகளையும், துளசி மாலைகளையும் சமர்ப்பித்துப் பெரியாழ்வாரைப் போல மலரத் தொண்டாற்றி வந்தார். உறையூரில் சோழன் அவையில் ஆடல் நிகழ்த்திப் பெரும் பரிசு பெற்றுத் திரும்பிய தேவதேவி என்னும் தாசி, இவரது நந்தவனத்தில் தற்செயலாகத் தங்க நேர்ந்தது. இவர் தேவதேவியின் அழகைப் பொருட்படுத்தாததைக் கண்டு, தன் அழகில் கர்வம் கொண்ட தேவதேவி இவரை வசப்படுத்திக் காட்டுவதாகச் சபதம் செய்தாள் . அதன்படி இவரது நந்தவனத்தில் குற்றேவல் செய்பவளாய்ச் சென்ற தேவதேவி ஒரு மழைக்காலத்து இரவில் விப்பிர நாராயணரை அணுகி, அணைத்துத்தன் சபதத்தில் வெற்றி பெற்றாள் . விப்பிரநாராயணரின் பொருள் குறைந்ததும், தேவதேவி அவரை விட்டு விலகினாள் . திருமால் பக்தரான விப்பிர நாராயணர் தேவதேவியின் பக்தராகி அவள் இல்லத்து முன் காத்து நின்றார். ...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.