எட்டுத்தொகை நூல்களில் தமிழர் மிகவும் ஏற்றிப் போற்றும் தனிச் சிறப்புப் பெற்றது. புறநானூறு கடவுள் வாழ்த்து உட்படப் புறப்பொருள் பற்றிக் கூறும் நானூறு பாடல்கள் கொண்டதால் இது இப்பெயர் பெற்றது. இந்நூலைப் புறம், புறப்பாட்டு , புறம் நானூறு எனும் வேறு பெயர்களாலும் குறிப்பிட்டார்கள். புறநானூற்றுப் பாடல்களின் அடிவரையறை கூற முடியாதவாறு பல பாடல்கள் சிதைந்து உள்ளன. 267, 268 ஆகிய இரு பாடல்கள் முற்றிலும் மறைந்து விட்டன. இந்நூலைப் பாடியோர் ஒரு நாட்டார் அல்லர்; ஒரு காலத்தார் அல்லர்; ஒரு சமயத்தார் அல்லர்; இவர்கள் தமிழகம் முழுவதும் பரவியிருந்த பல்வேறு நிலையில் வாழ்ந்த புலவர்கள். வேந்தன் முதல் வெண்ணிக் குயத்தி ஈறாகப் பல்வேறு சமூக நிலையில் இருந்த ஆடவரும் மகளிருமான 157 புலவர் பெருமக்கள் பாடிய பாக்களைக் கொண்ட நூல் இது. முதற் சங்க காலத்தைச் சேர்ந்த முரஞ்சியூர் முடி நாகராயர் பாடலே கடவுள் வாழ்த்துக்கு அடுத்த பாடலாக நூலின் முதல் பாடலாக அமைந்துள்ளது . இந்நூலைத் தொகுத்தார், தொகுப்பித...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.