முன்னே கண்ட நான்கும் (குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு) ஆசிரியப்பாவால் அமைந்த அகப்பொருள் தொகை நூல்கள். கலித்தொகை கலிப்பாவால் அமைந்தது. கலிப்பாவும், பரிபாடல் என்னும் பாவும் அகப்பொருள் பாட ஏற்றவை என்கின்றது, தொல்காப்பியம். " நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கினும் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரியதாகும் என்மனார் புலவர்" இச் சூத்திரத்தால் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே அகப்பொருள் இலக்கியத்தில் கலிப்பாவும் பரிபாடலும் முதன்மை பெற்றிருந்தன என்பது தெரிகிறது. இவ்விரண்டும் கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் உறுப்புகள் கொண்டவை. இவை இரண்டும் "வெண்பா நடைத்து" என்பர் தொல்காப்பியர். இவற்றை 'இசைப்பாட்டு' என உரையாசிரியர் கூறுவர். கலித்தொகையின் பாடல் எண்ணிக்கை நூற்றைம்பது என்று பேராசிரியரும், களவியல் உரையாசிரியரும் குறிப்பிடுவர். 150 பாடல்களும் சிறிதளவு சிதைவும் இன்றி முழுமையாகக் கிடைத்துள்ளன. முதல் பாடல் ...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.