முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 10, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெடுநல் வாடை

            நக்கீரர் இயற்றிய அகப்பொருள் பாடல் ' நெடுநல் வாடை'.  இது 188 அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பா.  இப்பாடலைப் பாடிய நக்கீரர் சங்க காலத்துச் சான்றோர் என்பது உறுதி.     தலைவனைப் பிரிந்து வருத்தும் தலைவிக்கு ஒரு பொழுது ஓர் ஊழி (யுகம்) போல நெடியதாகி வருத்தும் வாடைக் காலம்; பகை ஒருபுறம் இருக்க, மறுபுறம் தலைவியோடு போகம் நுகர்வதை வெறுத்த தலைவன் பகைவன் இருக்கும் வேற்று நாட்டுக்குச் சென்று வெற்றி என்னும் நல்ல விளைவைப் பெறக் காரணமான வாடை-இவ்வாறு நெடுநல் வாடை என்பதற்கு நச்சினார்க் கினியர் காரணம் கூறுவர் .  பூவிடைப் படினும் ஆண்டு கழிந்தது போன்று அல்லலுறும் அன்றிலைப் போன்ற தலைவிக்குப் பிரிந்த ஒரு பொழுதும் ஓர் ஊழியாய் நீளல் இயற்கையே.  துன்பம், எதிர்பார்ப்பு, ஐயம் முதலிய உணர்வுகள் நிறைந்த ஒரு நாளுக்கும் 24 மணி நேரந்தான்:  எனினும் அது 240 மணி நேரம் போலத் தோன்றுவதை அனைவரும் எப்பொழுதேனும் அனுபவித்தே இருப்பர்.  நேச நாடுகள் ஜெர்மனியில் படை வீரரை இறக்கிய இரண்டாம் உலகப் போரின் ஒரு முக்கிய நாளைக் குறித்த நாவலுக்கு The Longest Day...