தமிழில் எழுந்த இரண்டாவது காப்பியம் மணிமேகலை. தமிழ் நாட்டில் நடந்த கதையைக் கூறும் இரண்டாவது காப்பியம் மணிமேகலை. தமிழின் முதல் காப்பியம் - தமிழ் நாட்டில் நடந்த கதையைக் கூறும் முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக மணிமேகலை அமைந்துள்ளது. சிலப்பதிகாரத்தின் இறுதியில் 'மணிமேகலை மேல் உரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம்" முற்றும், எனக் கூறப்படுகிறது. எனவே சிலம்பும் மேகலையும் இரட்டைக் காப்பியங்கள். இரண்டும் சேர்ந்தே அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் தருவதால், இந்த இரட்டை நூல்களை ஒற்றைப் பெருங்காப்பியமாகக் கருதுதல் உண்டு. மணிமேகலை காப்பியம் இரு சிறப்புகளில் இரண்டாவதாக நிற்பது போலச் சில சிறப்புகளில் முதலாவதாகவும் நிற்கிறது. தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை. காப்பியத் தலைவியின் பெயரையே தலைப்பாகக் கொண்ட முதல் காப்பியம் மணிமேகலை. பரத்தையின் மகளைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு புரட்சி செய்யும் முதல் காப்பியம் மணிமேகலை. 'ம...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.