நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள். சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர். அவருள்ளும் பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர். இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப் பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான் பல்வேற் கடற்றானைப் பாண்டியன்" - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள் "பாடு தமிழ் வளர்த்த கூடல் " -புறத்திரட்டு "சோமன் வழிவந்த பாண்டிய நின் நாடுடைத்து நல்ல தமிழ்" திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்" -பதிற்றுப்பத்து பதிகம் பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.