செந்தமிழ் வல்ல சுந்தரர் திருமுனைப் பாடி நாட்டில், திருநாவலூரில் சடையனார்க்கும், இசை ஞானியார்க்கும் தவப் புதல்வராக அவதரித்தார். இவரது இயற்பெயர் நம்பி ஆரூரர். நரசிங்க முனையரையர் என்னும் நாடாளும் மன்னன் இவரைத் தம் சுவிகாரப் புதல்வனாக எடுத்து வளர்த்தான். கைலையில் சிவபிரானுக்கு அணுக்கத் தொண்டராக விளங்கிய ஆலால சுந்தரரே இந்த நம்பி ஆரூரர். அதனால் ஆரூரர், திருமணம் செய்து கொள்ளும் தருணத்தில் முக்கண்ணன் முதியவன் வடிவத்தில் வந்து இவரைத் தடுத்தாட்கொண்டான். பின், இவர் 'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' எனத் தொடங்கும் பாடல் முதல் பல்லாயிரம் பாடல்களால் பரமன் புகழைப் பாடினார். சுந்தரர், திருவாரூரில் பரவை நாச்சியாரையும், திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரையும் மணந்து கொண்டார். தம்பிரான் தோழன், சேரமான் தோழர், திருநாவலூரர், வான் தொண்டர், ஆளுடைய நம்பி என்னும் வேறுபெயர்கள் உண்டு. இறுதியில் சேரமான் பெருமாள் நாயனாரோடு கைலை அடைந்தார். சுந்தரர் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும், எட்டாம...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.