முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 10, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுந்தரர்

            செந்தமிழ் வல்ல சுந்தரர் திருமுனைப் பாடி நாட்டில், திருநாவலூரில் சடையனார்க்கும், இசை ஞானியார்க்கும் தவப் புதல்வராக அவதரித்தார்.  இவரது இயற்பெயர் நம்பி ஆரூரர்.  நரசிங்க முனையரையர் என்னும் நாடாளும் மன்னன் இவரைத் தம் சுவிகாரப் புதல்வனாக எடுத்து வளர்த்தான்.     கைலையில் சிவபிரானுக்கு அணுக்கத் தொண்டராக விளங்கிய ஆலால சுந்தரரே இந்த நம்பி ஆரூரர்.  அதனால் ஆரூரர், திருமணம் செய்து கொள்ளும் தருணத்தில் முக்கண்ணன் முதியவன் வடிவத்தில் வந்து இவரைத் தடுத்தாட்கொண்டான்.  பின், இவர் 'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' எனத் தொடங்கும் பாடல் முதல் பல்லாயிரம் பாடல்களால் பரமன் புகழைப் பாடினார்.     சுந்தரர், திருவாரூரில் பரவை நாச்சியாரையும், திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரையும் மணந்து கொண்டார்.  தம்பிரான் தோழன், சேரமான் தோழர், திருநாவலூரர், வான் தொண்டர், ஆளுடைய நம்பி என்னும் வேறுபெயர்கள் உண்டு.  இறுதியில் சேரமான் பெருமாள் நாயனாரோடு கைலை அடைந்தார்.     சுந்தரர் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும், எட்டாம...

திருநாவுக்கரசர்

           திருஞான சம்பந்தருக்கு முன்பே தோன்றியவர், திருநாவுக்கரசர்.  முதலாம் மகேந்திரவர்மனைச் சைவ சமயம் மேற்கொள்ளச் செய்த செயலினால் இச்சான்றோரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பது உறுதியாகிறது. திருநாவுக்கரசர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருவாமூரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர்.  தந்தையார் பெயர் புகழனார்.  தாயார் பெயர் மாதினியார்.  திருநாவுக்கரசரின் இளமைப் பெயர் மருள் நீக்கியார்.  பெற்றோரை இழந்த நாவுக்கரசரை இவருடைய தமக்கையார் வளர்த்து வந்தார்.     திருநாவுக்கரசர் சமண சமய நூல்களைப் பயின்று தேர்ந்து அச்சமயத்தில் சேர்ந்து பெரும் புகழ் பெற்றார்.  தருமசேனர் என்னும் புதிய பெயரும் பெற்றார்.     தம்பியார் சமண சமயம் சார்ந்தமையறிந்து சோர்ந்த தமக்கையார் 'தம்பி சைவத்திற்குத் திரும்பவேண்டும்' என்று இறைவனை வேண்டினார்.  இறைவன் அருளால் தருமசேனர்க்குச் சூலை நோய் வந்தது.  அது சமணரால் தீர்க்க முடியாததாகிப் பெரும் தொல்லை தர, இவர் தமக்கையாரை அடைந்தார்.  திலகவதியார் திருவதிகைப் பெருமானை வணங்கித் திருநீறு அண...