முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 19, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வளையாபதி

     ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி நூல் கிடைக்கவில்லை. இதன் கதையை வைசியபுராத்தால் அறியலாம் என்பர். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. எனினும் 'நிக்கந்த வேடத்து இருடி கணம்' என்றும், 'அறிவன்' என்றும் இதன் பாடல்கள் கூறுவதால் இக்காப்பியம் சமண நூல் என்பதனையும், இயற்றியவர் சமணப் புலவர் என்பதனையும், அறிகின்றோம்.  கிடைத்த பாடல்களில் சில ஆறடிப் பெற்ற பாடல்களாக இருக்கின்றன. நாலடியாக வரும் பாடல்களில் சில, இரண்டு வெவ்வேறு எதுகையைப் பெற்று வருவதால் இந்நூல் இளம்பூரணம், யாப்பருங்கல விருத்தி விருத்தி ஆகியவற்றுக்கு முற்பட்ட 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது எனக் கூறலாம்.        வளையாபதி பாடல் அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், இளம்பூரணர், பரிமேலழகர் ஆகியோர் உரைகளிலும் யாப்பருங்கல உரையிலும், புறத்திரட்டு எனும் தொகை நூலிலும் காணப்படுகின்றன. இவற்றில் இருந்து திரட்டப்பட்ட பாடல்கள் மொத்தம் எழுபது. இப்பாடல்களுக்குப் பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை எழுதச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்துள்ளது.      'தக்கயாகப் பரணி' யி...

சீவகசிந்தாமணி

  IV சோழர் காலம் கி.பி. 850 - 1350 ஐம்பெருங் காப்பியங்கள் சீவக சிந்தாமணி       ஐம்பெருங் காப்பியங்களைக் கூறும் போது, காலத்தே பிற்பட்ட சீவக சிந்தாமணியை முற்பட மொழிதல் மரபு. காப்பியத்தின் செம்மையான அமைப்பை முழுமையாகப் பெற்று , பின்னே எழுந்த காப்பியங்களுக்கு வழிகாட்டியாகி, சமண காப்பியம் ஆயினும் ஏனைய சமயத்தவராலும் ஏற்றிப் போற்றப்படுவதால் இதனை முதலாவதாக அமைத்தனர் போலும்.    தமிழ் காப்பியங்களில் பழைய உரை பெற்றவை இரண்டு.  அவை சிலப்பதிகாரமும் சிந்தாமணியுமாம்.  சங்க நூல்கள் பலவற்றுக்கு உரை வகுத்த உச்சிமேல் புலவர் கொள்ளும் நச்சினார்க்கினியரின் அறிவுரயைப்  பெற்றிருப்பதும் இந்நூலுக்கு ஒரு சிறப்பாகும்.      சீவக சிந்தாமணியை இயற்றிய மாபெரும் கவிஞர் திருத்தக்கதேவர்.   இவரைத் திருத்தகு முனிவர், திருத்தகு மகாமுனிவர், திருத்தக்க மகாமுனிகள், தேவர் என்னும் வேறு பெயர்களாலும் குறிப்பிடுவர்.  தேவர் ஒரு சமணத் துறவி. ஆன்ற புலமை பெற்ற சான்றோர் ஒருவரை ஆசிரியராகக் கொண்டு, கற்பன யாவும் கற்றுத் தேர்ந்தார் .  இவர் மதுரையில் இருந்த தமிழ்ச...