ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி நூல் கிடைக்கவில்லை. இதன் கதையை வைசியபுராத்தால் அறியலாம் என்பர். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. எனினும் 'நிக்கந்த வேடத்து இருடி கணம்' என்றும், 'அறிவன்' என்றும் இதன் பாடல்கள் கூறுவதால் இக்காப்பியம் சமண நூல் என்பதனையும், இயற்றியவர் சமணப் புலவர் என்பதனையும், அறிகின்றோம். கிடைத்த பாடல்களில் சில ஆறடிப் பெற்ற பாடல்களாக இருக்கின்றன. நாலடியாக வரும் பாடல்களில் சில, இரண்டு வெவ்வேறு எதுகையைப் பெற்று வருவதால் இந்நூல் இளம்பூரணம், யாப்பருங்கல விருத்தி விருத்தி ஆகியவற்றுக்கு முற்பட்ட 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது எனக் கூறலாம். வளையாபதி பாடல் அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், இளம்பூரணர், பரிமேலழகர் ஆகியோர் உரைகளிலும் யாப்பருங்கல உரையிலும், புறத்திரட்டு எனும் தொகை நூலிலும் காணப்படுகின்றன. இவற்றில் இருந்து திரட்டப்பட்ட பாடல்கள் மொத்தம் எழுபது. இப்பாடல்களுக்குப் பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை எழுதச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்துள்ளது. 'தக்கயாகப் பரணி' யி...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.