முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 12, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வைணவ இலக்கியங்கள்

 வைணவம் சங்க காலத்திலேயே தமிழகத்தில் வேரூன்றிய சமயம். "மாயோன் மேய காடுறை உலகம்" என்றும், " மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில்  தாவா விழுப்புகழ் பூவைநிலையும்' என்றும் தொல்காப்பியம் கூறும் நூற்பாக்கள் மாயோனாகிய திருமாலின் சிறப்பை உணர்த்தும், ' கணங்கொள் அவுணர் கறந்து பொலந்தார்  மாயோன் மேயஒண் நன்னாள்; - மதுரைக் காஞ்சி    'புள்ளணி நீள்கொடிச் செல்வன்'. - திருமுருகாற்றுப்படை    'காந்தளம் சிலம்பில் களிறுபடிந் தாங்குப்  பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ' - பெரும்பாண் ஆற்றுப்படை      மேற்கண்டவாறு சங்க இலக்கியங்கள் திருமாலைப் போற்றுகின்றன.  சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை மூலம் மாலின் மாண்பினைக் கூறும்.     சங்கம் மருவிய காலமான இருண்ட காலத்தில் களப்பிரர் ஆதிக்கத்தில் வைணவ சமயமும் ஒளி குன்றி இருண்டது.  களப்பிரர் ஆட்சியகன்று, பல்லவரும் பாண்டியரும் செந்தமிழ் நிலத்தே செங்கோலோச்சிய போது சைவம் புத்துயிர் பெற்றது போல வைணவமும் புத்துயிர் பெற்றது.     வைணவ சமயத்தை வாழ்விக்க வந்த சான்றோர்களை ஆழ்வார்கள் என்றும் ஆசார்யர்கள் என்றும் கூறு...

மாணிக்கவாசகர்

       'திருவாசகத்து உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்னும் பழமொழி எழுமளவு ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் திருவாசகத்தை வழங்கியவர் மாணிக்கவாசகர்.  திருவாதவூரர் என்னும் இயற்பெயர்  பெற்று இவர் கற்றுத் தேர்ந்தவராகி, அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராகப் பணியாற்றினார்.  வேந்தனுக்காகக் குதிரைகள் வாங்கத் திருப்பெருந் துறைக்குச் சென்ற மாணிக்கவாசகர், வழியில் குருவடிவில் திகழ்ந்த சிவபெருமானால் ஆட்கொள்ளப் பெற்றார்.  அதனால் குதிரை வாங்கக் கொண்டு வந்த பொருளைச் சிவாலயத் திருப்பணிக்குச் செலவிட்டார்.  இதை அறிந்த பாண்டியன் இவரைச் சிறையிட்டுத் துன்புறுத்தினான்.     இறைவன் இவர் பொருட்டு நரியைப் பரியாக்கினார்; வைகையில் வெள்ளம் வரச் செய்தார்;  பிட்டுக்கு மண் சுமந்தார்; பிரம்படியும் பெற்றார்.  இறைவனின் திரு விளையாடல்களால் மாணிக்க வாசகரின் மாண்பினை மன்னனும் மக்களும் உணர்ந்தனர்.  மாணிக்க வாசகர், மந்திரிப் பதவியை நீத்துச் சமயத்தொண்டு மேற்கொண்டு திருவாசகம் அருளினார்.  சிவபெருமானே மனித வடிவில் தோன்றி, திருவாசகம் முழுவதையும் தம் கைப்பட எழ...