திருமந்திரம் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' தமிழரின் தலையாய கொள்கையை விளக்கும் இத்தொடரை அறியாதார் தமிழுலகில் இலர். இவ்வுரை பெற்ற நூலே தமிழ் மந்திரம் எனச் சிறப்பிக்கப் பெறும் 'திருமந்திரம்'. இதனை இயற்றியவர் திருமூலர். இவரைத் திருமூல நாயனார் என வழங்குவர். திருமூலர், திருக்கயிலையில் நந்தியின் திருவருள்பெற்ற சிவயோகியருள் ஒருவர். எண் பெருஞ்சித்தி கைவரப்பெற்ற சித்தர்; செந்தமிழ் பக்தர்; திருவாவடுதுறைக் கோயிலில் உள்ள அரசமரத்தடியில் மூவாயிரம் ஆண்டு சிவயோகத்தில் அமர்ந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல் பாடியவர். இக்குறிப்புகளைப் பெரிய புராணம் தருகிறது. திருமந்திரம் நூலில் வரும் பாடல்கள் சிலவும் இவற்றிற்கு அகச்சான்றாய் நிற்கின்றன. திருமூலர் நெடுங்காலம் வாழ்ந்த சான்றோர் என்பதில் ஐயம் இல்லை. திருமந்திரம் நூலில் ஒன்பது தந்திரங்கள் உள்ளன. இவை 232 அதிகாரங்களாகப் பகுக்கப் பட்டுள்ளன. இவற்றுள் உள்ள பாடல்கள் மூவாயிரம். 'மூலம் உரைசெய்த மூவாயிரத் தமிழ்' என்பது பாயிரக் கூற்று...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.