முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 31, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நற்றிணை

           குறுந்தொகை அடிகளிலும் மிக்கு, ஒன்பதடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டடிப் பேரெல்லையும் கொண்ட பாடல்களின் தொகுதி நற்றிணை.  திணை என்னும் சொல் ஆகுபெயராய் அகத்திணை நூலைக் குறிக்கிறது. ' திணை எழுபது' முதலிய நூற்பெயரிலும் இத்தன்மையைக் காணலாம்.  சிறிய பாடல்களும் இன்றிப் பெரிய பாடல்களும் இன்றி அளவான பாடல்களைப் பெற்றமையால் இத்திணை, நல் என்னும் அடைமொழி பெற்று 'நற்றிணை'யாயிற்று, என்பர்.  இதன்கண் கடவுள் வாழ்த்து நீங்கலாக 400 பாடல்கள் உள்ளமையால் இது 'நற்றிணை நானூறு' எனவும் வழங்கப்பட்டது.  எனினும் 234 ஆம் பாடல் எனச் சிலரும், இறையனார் அகப் பொருள் உரையில் மேற்கோளாக வரும், 'சான்றோர் வருந்திய வருத்தமும்' எனத் தொடங்கும் பாடலே மறைந்து போன நற்றிணைப் பாடல் எனச் சிலரும் கூறுவர்.  385 ஆம் பாடலின் பிற்பகுதி மறைந்து போனது.  56 பாடல்களைப் பாடிய புலவர்கள் பெயர் தெரியவில்லை.      நற்றிணையைத் தொகுப்பித்தவன், பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.  தொகுத்தவர் பெயர் ஏட்டில் இல்லை.  நற்றிணையை 1914-இல் உரை எழுதிப் பதிப்பித்தவர், பி...

குறுந்தொகை

     எட்டுத் தொகை நூலில் முதலில் தொகுக்கப்பட்ட நூல், இது.  இதற்குக் 'குறுந்தொகை நானூறு' என்றும் பெயர் இருந்ததை இறையனார் களவியல் உரையால் அறியலாம்.  இதன் சிற்றெல்லை நான்கு அடி; பேரெல்லை எட்டடி.      தற்போது கிடைக்கும் நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்கள் உள்ளன.  307, 391 ஆகிய இரு பாடல்களும் குறுந்தொகையின் பேரெல்லையை மீறி ஒன்பது அடிகள் பெற்றுள்ளன.  391 ஆம் பாடல் சில பாட பேதங்களுடன் எட்டடியாகச் சில ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது.  307 ஆம் பாடல் எல்லா ஏடுகளிலும் ஒன்பது அடி கொண்டதாகவே அமைந்துள்ளது.  எனவே இப்பாடலை நீக்கினால் ' குறுந்தொகை நானூறு' என்னும் பெயர் பொருத்தமாக அமைகிறது.      'இத்தொகை முடித்தான் பூரிக்கோ, இத் தொகை பாடிய கவிகள் இரு நூற்றைவர்' என்னும் பழங் குறிப்பு நூலின் இறுதியில் காணப்படுகிறது.  குறுந்தொகையின் 380 பாடலுக்குப் பேராசிரியர் உரை வகுக்க.  எஞ்சிய 20 பாடலுக்கு நச்சினார்க்கினியர் உரை வழங்கினார்.  இதை, " நல் அறிவுடைய தொல் பேராசான் கல்வியும் காட்சியும் காசினி அறிய  பொருள்த...