3. நான்மணிக்கடிகை நன்கு உயரிய மணிகளாய் இயன்ற ஒரு வகை அணிகலன் போல நான்கு நீதிமணிகளால் இயன்ற அற அணியே இந் நான்மணிக்கடிகை . இதனை இயற்றியவர் விளம்பி நாகனார். விளம்பி என்பது ஊர்ப்பெயர். இவர் வைணவர் என்பது இந்நூலில் உள்ள இரண்டு கடவுள் வாழ்த்துப் பாடலால் உறுதியாகிறது. இவர் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பர், டி .வி. சதாசிவ பண்டாரத்தார். இந்நூல் தொல்காப்பியர் கூறும் 'அம்மை' எனும் வனப்பு பெற்றது. இந்நூலில் இரண்டு கடவுள் வாழ்த்துச் செய்யுள் உட்பட மொத்தம் 104 பாடல்கள் உள்ளன. நான்கு சிறந்த கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிடையே ஓர் இயல்பு தோன்றப் பாடியிருக்கும் விளம்பி நாகனாரின் புலமை போற்றத் தக்கது. அணி என்பன நான்கும் ஒரு பாடல். இல்லை என்பன நான்கும் ஒரு பாடல், அணி என வருபவை நான்கு மாணிக்க மணிகளால் ஓர் அணி, நான்கு மரகத மணியால் ஓர் அணி என்று இனப்படுத்திச் செய்த அணிகலன்கள் போல ஒருமையும் பெருமையும் மிக்கனவாய்த் திகழ்கின்றன. இல்லை என வரும் பாடலை இங்கே காண்க. கண்ணின் சிறந...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.