முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 22, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இருண்ட காலம்

            சங்க காலம் என்பது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையுள்ள காலம்.  சிலர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையுள்ள காலம் என்பர்.  கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி முதல் ஆறாம் நூற்றாண்டு வரையுள்ள காலம் இருண்ட காலம் ஆகும்.  இது தமிழ்நாட்டு வரலாற்றிலும் இருண்ட காலம். தமிழிலக்கிய வரலாற்றிலும் இருண்ட காலம்.  இதே காலப்பகுதியைச் 'சங்கம் மருவிய காலம்' என்றும் குறிப்பிடுவார்கள். இருண்ட காலத்து இலக்கியங்கள்      தமிழ்நாடு முழுவதையும் அடிமைப்படுத்திய களப்பிரர் காலமாகிய இருண்ட காலத்தில் சங்க இலக்கியம் போன்ற - சிலம்பு, மேகலை போன்ற முழுநிலா உதயமாகவில்லை.  எனினும் செறிந்த இருளின் நடுவே கண்சிமிட்டும் விண்மீன்கள் போலச் சில நீதி நூல்கள் தோன்றின.  இவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.  அவற்றுள் நீதி நூல் அல்லாத வேறு நூல் சிலவும் உண்டு.     புறச் சமயங்களின் ஆதிக்கத்துக்கு நடுவே அகச் சமயத்துக்கு ஆக்கம் தேடும் ஊக்கமும் உணர்வும் பெற்ற சிவனடியார் சிலர் செந்தமிழ்ப் பக்திப் பனுவல்கள் செய்தனர்.  திருமூ...