பரணி இலக்கியங்களில் மிகவும் பழமையானது 'கலிங்கத்துப் பரணி'. இதுவே பரணி நூல்களில் தலை சிறந்தது என்று, அன்று முதல் இன்று வரை போற்றப்படுகின்றது. கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் சயங்கொண்டார். இவர் தீபங்குடி என்னும் ஊரினர். இவர் கி.பி. 1070 முதல் 1118 வரை ஆண்ட முதல் குலோத்துங்கன் காலத்தவர். குலோத்துங்கனின் படைத் தலைவனான கருணாகரத் தொண்டைமான், சோழப் பெரும் படையுடன் கலிங்க நாடு சென்று, வாகை சூடித் திரும்பினான். அதன் பின் குலோத்துங்கன் , சயங்கொண்டாரிடம் உரையாடிய போது , "கலிங்கம் வென்றமையால் யானும் சயங்கொண்டான் ஆயினன் " என்று கூறினான். அதைக் கேட்ட புலவர், "அப்படியாயின் சயங்கொண்டானான உன்னைச் சயங்கொண்டானான யான் பாடுவது தகும் " என்று கூறினார். அதனால் பிறந்ததே 'கலிங்கத்துப் பரணி' என்று கூறுவர் . கலிங்கத்துப் பரணி மொத்தம் பதின்மூன்று பகுதிகளைக் கொண்டது. அவையாவன: கடவுள் வாழ்த்து, கடைத்திறப்பு , காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, இந்திரசாலம், இராச பாரம்பரியம், பேய்முறைப்பாடு, அவதாரம், காளிக்க...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.