Looking For Anything Specific?

பரணி

 'ஆனை ஆயிரம் அமரிடை வென்ற 
மானவனுக்கு வகுப்பது பரணி.'

    என்பது இலக்கண விளக்கத்தின் கூற்று.  போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்ற மாவீரனைச் சிறப்பித்துப் பாடுவதே பரணி என்னும் சிற்றிலக்கியமாகும் .

    பரணி என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயர்.  போர்க் குரிய தெய்வமாகிய காளி (கொற்றவை)க்குரிய நாள் பரணி.  எனவே வெற்றி பெற்ற வேந்தன் பரணி நாளில் கொற்றவைக்குக் கூழ் அட்டுப் படைத்துக் கொண்டாடுவது மரபாகும்.

    பரணி பலவகை உறுப்புக்களைக் கொண்டது.  அவை கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடு பாடியது.  பேய் முறைப்பாடு, காளிக்குக் கூளி கூறியது, களம் பாடியது, வாழ்த்து முதலியனவாம். ஒவ்வொரு பரணியிலும் இவ்வுறுப்புக்கள் முறை மாறி வேறு வகையிலும் இடம் பெறுதல் உண்டு.

    போரிலே வென்றவரைச் சிறப்பிப்பதே பரணி இலக்கியம் என்றாலும் தோற்றவரைச் சார்ந்தே நூலுக்குப் பெயரிடுவது மரபு .  கலிங்கத்துப் பரணி, தக்கயாகப்பரணி,பாசவதைப் பரணி, இரணியவதைப் பரணி முதலியன தோற்றோரின் பெயரிலே அமைந்ததைக் காண்க. 



கருத்துரையிடுக

0 கருத்துகள்