முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 14, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை

           குறிஞ்சித்திணைப் பொருளைக் கூறுவதே குறிஞ்சிப் பாட்டு.  இது 261 அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பா.  ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்கு இதைப் பாடினார் கபிலர் எனும் குறிப்புத் தருகிறார் நச்சினார்க்கினியர், அகப்பொருளே தமிழின் மிகப் பெருஞ்சிறப்பு எனக்கருதியும், ஏறத்தாழ நூறுவகைப் பூக்களின் வேறு வேறு பெயர்களை உரைக்கும் தமிழின் வளத்தையும் தமிழரின் பயிர் நூல் நலத்தையும் கூற ஏற்றது குறிஞ்சித் திணை எனக் கருதியும் கபிலர், இப்பாடலைப் பாடி ஆரிய அரசன் தமிழாற்றலை அறியச் செய்தார் போலும்!  கபிலர், குறிஞ்சி பாடுவதில் வல்லவர்.  அகத்தொகை நூல்களிலும்,பதிற்றுப் பத்து, புறநானூறு ஆகிய புறத்தொகை நூல்களிலும் இவர்தம் புலமை விளங்கும் பாடல்கள் உள்ளன.     தலைவியின் சீரிய அழகு சிதைவதற்குரிய காரணம் களவு என அறியாத செவிலித் தாய்க்குத் தோழி உண்மையை உணர்த்தி அறத்தொடு நிற்றலைத் தெரிவிப்பது இப்பாட்டு.  தோழி அறத்தொடு நிற்றல் ஏழு வகையின என்பர், தொல்காப்பியர்.  அவற்றுள் ஆறு வகையினை உள்ளடக்கியது கபிலரின் பாட்டு.  இதை 'பெருங்குறிஞ்...