முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 18, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யசோதர காவியம்

     'யசோதர காவியம்' என்னும் சிறு காப்பியம் வட மொழிக் கதையைத் தழுவி எழுதப்பட்டது. இக்காவியம் கூறும் யசோதரன் முதலான மாந்தர்களின் வரலாறு வேறெந்தத் தமிழ் நூலிலும் குறிக்கப் பெற வில்லை. ஆனால் வடமொழியில் யசோதரன் வரலாறு கூறும் நூல்கள் பல உள.     மகாபுராணத்தின் இரண்டாம் பகுதியான உத்திர புராணத்தைக் குணபத்திரர் இயற்றினார். இப்புராணத்தில் தான் முதன் முதலில் யசோதர காவியக் கதை கூறப்படுகின்றது.  இக்கதையைச் சோமதேவ சூரி என்பவர், "யசஸ் திலகம்" என்னும் பெயரிலும், வாதி ராச சூரி என்பவர் "யசோதர சரிதம்" என்னும் பெயரிலும் தனி நூல்களாக எழுதினார். ஹரி பத்ஃதிரர் என்பரும் புட்பதந்தர் என்பவரும் இதே கதையை யசோதர காவியமாக இயற்றியளித்தனர்.  தமிழில் உள்ள யசோதர காவியம் புட்பதந்தர் இயற்றிய வடமொழி நூலைத் தழுவியது என்று ஒரு வெண்பா கூறுகின்றது.  இதே வெண்பா, யசோதர காவிய ஆசிரியர் பெயர் வெண்ணாவலூர் உடையார் வேள் எனவும் குறிப்பிடுகின்றது. 'புட்பதந்தன் சொன்ன பொருள்சேர் கதைதன்னைத்  திட்பமாய்ச் செந்தமிழில் செப்பினான் - நட்புடையார்  நண்ணார் இலர் என்ன நாடகக் கொடைக்கையார்  வெண்ணா...