முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 6, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

களவழி நாற்பது

  12. களவழி நாற்பது      போர்க்களத்து நிகழ்ச்சிகளைப் பாடும் நாற்பது பாக்களைக் கொண்டது, களவழி நாற்பது.  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் புறப்பொருள் சார்ந்த போரைப் பற்றிக் கூறும் நூல் இஃது ஒன்றே. ' ஏரோர் களவழி அன்றிக் களவழித்  தேரோர் தோற்றிய வென்றியும்'     என்னும் தொல்காப்பிய நூற்பா, ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப்பெறுவது களவழி என்று தெரிவிக்கிறது.  களவழி, வாகைத் திணையில் ஒரு துறை, மேற்குறிப்பிட்ட தொல்காப்பிய நூற்பாவுக்கு உரை எழுதியவர்கள் களவழி, நாற்பது நூலையும் பாடலையும் மேற்கோளாகக் காட்டியுள்ளனர்.  பரணி  நூலில் 'களம் பாடியது' என்னும் பகுதி களவழி போலவே போர்க்களத்து நிகழ்ச்சிகளை விளக்கும்.  களவழி நாற்பதில் உள்ள பாடல்களில் ஒவ்வொன்றும் 'களத்து 'என்னும் சொல்லைக் கொண்டு முடிகிறது.  இந்நூல் அம்மை என்னும் வனப்பு அமைந்தது.     இந்நூலை இயற்றியவர் பொய்கையார்.  சோழன் கோச்செங்கணானும், சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போர்'என்னும் ஊரில் பொருதனர்.  அப்போது சோழன் சேரனை வென்று சிறையிட்டான்.  புலவர் பொ...

முதுமொழிக் காஞ்சி - ஏலாதி

     10. முதுமொழி        முதுமொழி என்பது பழமொழி என்னும் பொருள் தருவது.  மூதுரை என்பதும் இதுவே, காஞ்சி என்பது பல்வகை நிலையாமையைக் குறிப்பது என்று தொல்காப்பியம் கூறும்.  முதுமொழிக் காஞ்சி நூல் தொல்காப்பியரின் காஞ்சித் திணைக்குப் பொருந்துவதாய் இல்லை.  புறப்பொருள் வெண்பா மாலை 'முதுமொழிக் காஞ்சி' என்று ஒரு துறை கூறுகிறது. ' பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும்  உலகியல் பொருள்முடிவு உணரக் கூறின்று '     என்பது   துறை விளக்கம்.  முதுமொழிக் காஞ்சி நூற்பொருள் இத்துறைக்குப் பொருந்துகிறது.     காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவை.  பல மணிகள் கோத்த காஞ்சி அணிகலன் போலப் பல முதுமொழிகளைக் கோத்த காஞ்சியே இந்நூல் எனவும் கூறுவர் :     முதுமொழிக் காஞ்சியை ஒரு நீதி நூலாகக் கொள்வதே பொருந்தும்.     இந்நூலாசிரியர் மதுரைக் கூடலூர்க் கிழார்.  இவர் சங்ககாலத்துப் புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார் அல்லர்.  இவர் வச்சிரநந்தியின் தமிழ்ச்சங்க காலத்தைச் சேர்ந்தவர்;  எனவே ...