முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 29, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நந்திக் கலம்பகம்

      கலம்பக நூல்களில் மிகப் பழமையான நந்திக் கலம்பகம், ஒரு வரலாற்று நூலாகத் திகழும் தனிச் சிறப்புப் பெற்றது.  தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என வழங்கப் பெறும் மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்ட நூல் இது.  மூன்றாம் நந்திவர்மன் கி.பி. 825 முதல் 850 வரை ஆண்டவன்.     நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் இன்னார் என்று உறுதியாகக் கூற முடியவில்லை.  நந்திவர்மனின் மாற்றாந்தாய் மக்கள் நால்வரில் ஒருவன், இவனைக் கொல்வதற்காகவே வசை வைத்து இந்நூலைப் பாடினான் என்றும், பாடியவனின் பெயர் 'காடவன்' என்பதாக இருக்கலாம் என்றும் கருதுவர்.     நந்திக் கலம்பகத்தின் பாடல் ஒன்றைத் தற்செயலாய்க் கேட்ட நந்திவர்மன், நூல் முழுவதையும் கேட்க விரும்பினான்.  நூல் முழுவதையும் கேட்டால், அவன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழ்ப் பாடல் கேட்கும் தணியாத ஆவலுக்குத் தன்னையே பலியாக, கொடுக்க முன்வந்தான்.  நூல் முழுவதையும் கேட்ட மன்னன் இறந்தான்.  தமிழுக்காக தமிழ்ப் பாடலுக்காகத் தரணியாளும் மன்னன் தன் உயிரையே உவந்தளித்தான் என்பது உலக வரலாற்றில் வேறெங்கும் காண முடியாத நிகழ்ச்...

கலம்பகம்

     பலவகை வண்ணமும், வடிவமும், வாசகமும் நிறைந்த மலர்களைக் கலந்து தொடுக்கப்பட்ட பூமாலையைக் கதம்பம் என்றாற் போலப் பலவகை உறுப்பும், பலவகைப் பொருளும், பல்வகைச் செய்யுளால் கலந்து பாடப் பெறும் சிற்றிலக்கியம் கலம்பகம் எனப்பட்டது.     இவ்வாறு பாடப்பெறும் கலம்பத்தின் செய்யுள் தொகை, கடவுளர்க்கு நூறு, முனிவர்க்குத் தொண்ணூற்றைந்து, அரசர்க்குத் தொண்ணூறு, அமைச்சர்க்கு எழுபது, வணிகர்க்கு ஐம்பது, வேளாளர்க்கு முப்பது என்னும் அளவில் அமைய வேண்டும் என்பதும் விதி.  இவ்வளவினை மீறிய கலம்பகங்களும் உண்டு.  திருக்கலம்பகத்தில் 110 செய்யுட்களும், ஆளுடைய பிள்ளை கலம்பகத்தில் 49 செய்யுட்களும் உள்ளன.     கலம்பகம், பெரும்பான்மை அகத்திணைச் செய்திகளையையும் , சிறுபான்மை புறத்திணைச் செய்திகளையும் அவற்றின் துறைகளையும் பெற்றுத் திகழும்.     கலம்பகங்கள் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு முதல் தோன்றலாயின எனக் கூறுவர் .  காலத்தால் முற்பட்ட கலம்பகம், நந்திக் கலம்பகம், திருவெங்கைக் கலம்பகம், அழகர் கலம்பகம், மதுரைக் கலம்பகம், கச்சிக் கலம்பகம்,தில்லைக் கலம்பகம், திருக்காவலூர்க் கல...

காந்தியம்மை பிள்ளைத் தமிழ்

    பெண்பாற் பிள்ளைத் தமிழில் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழுக்கு அடுத்த நிலையில் விளங்கும் சிறப்புப் பெற்றது. 'திருநெல்வேலிக் காந்தியம்மை பிள்ளைத் தமிழ்'.  இந்நூலைப் பாடியவர் திருநெல்வேலியைச் சார்ந்த தச்சன் நல்லூரில் வாழ்ந்த அழகிய சொக்கநாதர்.  இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டினர் .     சிறுமி காந்தியம்மையைக் கவிஞர் 'வருக வருக' என்றழைக்கும் வருகைப் பருவம் சிறப்பு மிக்கது . வாரா திருந்தால் இனிநான் உன்      வடிவேல் விழிக்கு மைஎழுதேன்  மதிவாள் நுதற்குத் திலகமிடேன்      மணியால் இழைத்த பணிபுனையேன்  பேரா தரத்தினொடு பழக்கம்      பேசேன்; சிறிதும் முகம்பாரேன்  பிறங்கு சுவைப்பால் இனிதூட்டேன்      பிரியமுடன் ஓக்கலையின் வைத்துத்  தேரார் வீதி வளம் காட்டேன்      செய்யக் கனிவாய் முத்தமிடேன்; திகழு மணித்தொட்டிலில் ஏற்றித்      திருக்கண் வளரச் சீராட்டேன்; தாரார் இமவான் தடமார்பில்      தவழும் குழந்தையாய் வருகவே  சாலிப் பதிவாழ் காந்திமதித்    ...