முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ்

     இந்நூலையும் குமரகுருபரரே பாடினார்.  குமரகுருபரர் தருமபுரம் சென்று அங்கிருந்த மாசிலாமணி தேசிகரிடம் ஞானோபதேசம் பெற விரும்வினார்.  தேசிகரின் விருப்பப்படி சிதம்பரம் செல்லப் புறப்பட்ட குமரகுருபரர் வழியில் வைத்தீஸ்வரன் கோயிலை அடைந்தார்.  அங்கே எழுந்தருளி இருக்கும் குமரக் கடவுளைக் கண்டு, காதல் மீதூறத் தொழுது, பின்பு அவர் மீது 'முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்' பாடினார். 

    வைத்தீஸ்வரன் கோயில் என்று இன்று வழங்கப்பெறும் ஊரின் பழைய பெயர், புள்ளிருக்கு வேளூர் என்பதாகும்.  சம்பாதி, சடாயு, இருக்கு வேதம், குமரக் கடவுள், சூரியன் ஆகியோர் சிவபிரானை வழிபட்ட தலமே புள்ளிருக்கு வேளூர் ஆகும்.  இங்குள்ள சிவன் கோயிலில் முத்துக் குமாரசாமி சந்நிதி உள்ளது.  குமரகுருபரர் இம்முத்துக் குமாரசுவாமியின் பெருமைகளை 'முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்' நூலில் விளங்கக் கூறியுள்ளார்.

    முத்துக்குமரன், முக் கண்ணணோடு விளையாடும் போது செய்யும் சிறு குறும்புச் செயல்களைப் படிப்பவர் களி கூரக் கூறுகின்றார் குமரகுருபரர்.  குமரன் தந்தையின் மார்பில் நின்று குரவைக் கூத்தாடுவது, அவர் ஏந்திய பறையை முழக்குவது , கரத்திருக்கும் நெருப்பைக் கங்கை நீர் பெய்து அணைப்பது, பிறை மதியைப் பிடித்துப் பாம்பின் வாயில் திணிப்பது, சடைக்காட்டின் கங்கையாற்றில் கண்கள் சிவக்க நீராடுவது முதலிய குறும்புச் செயல்களைக் கரும்புக் கவிதையில் வருணிக்கின்றார் கவிஞர்.

மழவுமுதிர் கனிவாய்ப் பசுந்தேறல் வெண்துகில் 

    மடித்தலம் நனைப்ப அம்மை 

மணிவயிறு குளிரத் தவழ்ந்தேறி எம்பிரான் 

    மார்பினில் குரவையாடி 

முழவுமுதிர் துடியினில் சிறுபறை முயக்கியனல்

    மோலிநீர் பெய்தவித்து 

முளைமதியை நெளியரவின் வாய்மடுத்து இளமானின் 

    முதுபசிக்கு அறுகருத்தி 

விழவுமுதிர் செம்மேனி வெண்ணீறு துகந்தெழு 

    மிகப்புழுதி யாட்டயர்ந்து 

விரிசடைக்காட்டினின் திருவிழிகள் சேப்பமுழு 

    வெள்ளநீர்த் துளையம் ஆடிக் 

குழவுமுதிர் செல்விப் பெருங்களி வரச்சிறு 

    குறும்புசெய் தவன் வருகவே 

குரவுகமழ் தருகந்த புரியில் அருள் குடிகொண்ட 

    குமரகுரு பரன் வருகவே. 


 










 














கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...