முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

     ஐந்தாண்டு வரை பேசாத ஊமைக் குழந்தையாயிருந்து பின்னர் தமிழ் வெள்ளம் பெருகிப் பாடும் பாடல்கள் பாடித் தமிழை வளர்த்த பெரும் புலவர் குமர குருபரர்.  இவர் கி.பி. 17ம் நூற்றாண்டில் பிறந்தார்.  இவர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழே, பிள்ளைத் தமிழ் நூல்களில் தலைசிறந்தது.  திருமலை நாயக்கர் முன்னிலையில் குமரகுருபரர் இந்நூலை அரங்கேற்றும்போது, மீனாட்சியம்மையே சிறுமி வடிவில் அவைக்கு வந்து இந்நூலைக் கேட்டு அகமகிழ்ந்து அருள் புரிந்தாள் எனக் கூறுவர் .

முத்தப் பருவத்தில்,

காலத் தொடுகற் பனை கடந்த 

    கரு வூலத்துப் பழம் பாடல் 

கலைமாச் செல்வர் தேடி வைத்த 

    கடவுள் மணியே .....

எனத்தொடங்கும் பாடலைக் குமரகுருபரர் அரங்கேற்றுகையில் குழந்தையாய் வந்த மீனாட்சியம்மை, தம் கழுத்திலிருந்த முத்து மாலையைக் கழற்றிக் கவிஞர்க்கு அணிவித்து மறைந்து விட்டாள் என்பர். இந்நிகழ்ச்சி,

தொடுக்கும் கடவுட் பழம்பாடல் 

    தொடையின் பயனே நறைபழுத்த 

துறைத்தீந் தமிழின் ஒழுகுநறும் 

    சுவையே அகந்தைக் கிழங்கையகழ்ந்து 

எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு 

    ஏற்றும் விளக்கே வளர்சிமய 

இமயப் பொருப்பில் விளையாடும் 

    இளமென் பிடியே ; எறிதரங்கம் 

உடுக்கும் புவனம் கடந்து நின்ற

     ஒருவன் திருவுள்ளத்தில்  அழகு 

ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் 

    உயிரோடு வியமே மதுகரம் வாய் 

மடுக்கும் குழற்கா டேந்தும் இளம் 

    வஞ்சிக் கொடியே வருகவே 

மலையத் துவசன் பெற்ற பெரு 

    வாழ்வே வருக வருகவே.

    என்னும் பாடலை அரங்கேற்றும் போது நிகழ்ந்தது என்பர்.  குமரகுருபரரின் இப்பாடல், படித்தோர் மனத்தில் உயிரோவியமாய்த் திகழ்கின்றது.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...