ஐஞ்சிறு காப்பியங்கள் என்னும் வழக்கில் நாககுமார காவியம் என்னும் பெயரைக் காண்கின்றோம். இந்நூலாசிரியர் சமண சமயத்தவர் என்னும் ஒன்றைத் தவிர இவரைப் பற்றிய வேறு செய்திகள் நமக்குக் கிடைக்கவில்லை; நூலைப் பற்றிய செய்திகளும் கிடைக்கவில்லை.பிற காப்பியச் செய்யுள்களை மேற்கோளாகக் காட்டிய உரையாசிரியர்கள் இக்காப்பியப் பாடலை மேற்கோளாகக் காட்டாததும், பிற காப்பியச் செய்யுள்களைத் தன்னகத்தே கொண்ட புறத்திரட்டில் இக்காப்பியச் செய்யுள் ஏதும் காணப் படாமையும் விந்தையே!
0 கருத்துகள்