முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உதயணகுமார காவியம்

     உதயண குமார காவியத்தின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  இக்காப்பியம் கொங்கு வேளிரின் 'பெருங்கதை ' கூறும் உதயணன் வரலாற்றையே கூறுகின்றது.  பெருங்கதையின் உதயணன் வரலாறு, வடமொழியிலுள்ள 'பிருகத்கதாமஞ்சரி', 'கதாசரித சாகரம்'ஆகிய நூல்களிலும், பைசாச மொழியில் அமைந்த 'பிருகத்கதா' என்னும் நூலிலும் உள்ளது.


    பெருங்கதைப் பெரியதாகவும்   அகவற்பாவிலும் அமைந்தது. அதற்கு ஒரு சுருக்கப் பதிப்பு வெளியிடுவது போல் இந்நூலாசிரியர் உதயணன் கதையைச் சுருங்கிய அளவில் விருத்தப்பாவில் இயற்றினார்.இதன் கண் உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம், மகதகாண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம், துறவுக்  காண்டம் ஆகிய ஆறு காண்டங்கள் உள்ளன.காப்பியத்துள் மொத்தம் 367 செய்யுள்கள் உள்ளன.


    வத்தவ நாட்டின் கௌசாம்பி நகரத்து அரசன் உதயணன்.  அவனை அவந்தி நாட்டு மன்னன் பிரச்சோதனன் என்னும் அரசன் மாய யானையின் மூலம் சிறைப்படுத்துகின்றன.  உதயணன் நண்பனும் அமைச்சனுமான யூகி என்பான், அவன் சிறை மீளத் துணை செய்கிறான்.  பிரச்சோதனன் மகள் வாசவ தத்தைக்கு யாழ் சொல்லிக் கொடுக்கும் உதயணன் அவளை மணந்து தன் நாடு சென்று அவளிடம் மீளாத பேரன்பு உடையவனாகின்றான்.  இறுதியில் உதயணன் துறவு மேற்கொள்கின்றான்.


    'பெருங்கதை' காப்பியம் இன்று கிடைத்தாலும், அதன் முதலிலும் இடையிலும் இறுதியிலும் சில பகுதிகள் கிடைக்கவில்லை.  அப்பகுதிகளின் கதைப் போக்கை உணர உதயண குமார காவியம் உதவுகின்றது.  இதுவே இக்காவியத்தின் பயன்.மற்றபடி இதன் செய்யுள்கள் அவ்வளவு சுவையுடையன அல்ல.  இக்காவியத்துக்கு உரையெழுதிய பெருமழைப் புலவர் பெ.வே. சோமசுந்தரனார் , "இவர் (உதயண குமார காவிய ஆசிரியர்) செய்யுள் செய்யும் வன்மையுடையவர் அல்லர் என்பது இவர் செய்யுளை ஓதுவார்க்கு விளங்கும்"  என்று கூறுகின்றார்.  எனினும் இக்காவியப் பாடல் ஒன்றையேனும் நாம் அறிந்து கொள்வோம்.


    நளகிரி என்னும் யானைக்கு மதம் பிடிக்கிறது.   அதனை யாழிசைத்து உதயணன் அடக்கினான். மதம் பிடித்த யானையின் செயலைக் காவிய ஆசிரியர் ஓவியமாகத் தீட்டிக் காட்டுகின்றார்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...