கலம்பக நூல்களில் மிகப் பழமையான நந்திக் கலம்பகம், ஒரு வரலாற்று நூலாகத் திகழும் தனிச் சிறப்புப் பெற்றது. தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என வழங்கப் பெறும் மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்ட நூல் இது. மூன்றாம் நந்திவர்மன் கி.பி. 825 முதல் 850 வரை ஆண்டவன். நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் இன்னார் என்று உறுதியாகக் கூற முடியவில்லை. நந்திவர்மனின் மாற்றாந்தாய் மக்கள் நால்வரில் ஒருவன், இவனைக் கொல்வதற்காகவே வசை வைத்து இந்நூலைப் பாடினான் என்றும், பாடியவனின் பெயர் 'காடவன்' என்…
மேலும் படிக்க »பலவகை வண்ணமும், வடிவமும், வாசகமும் நிறைந்த மலர்களைக் கலந்து தொடுக்கப்பட்ட பூமாலையைக் கதம்பம் என்றாற் போலப் பலவகை உறுப்பும், பலவகைப் பொருளும், பல்வகைச் செய்யுளால் கலந்து பாடப் பெறும் சிற்றிலக்கியம் கலம்பகம் எனப்பட்டது. இவ்வாறு பாடப்பெறும் கலம்பத்தின் செய்யுள் தொகை, கடவுளர்க்கு நூறு, முனிவர்க்குத் தொண்ணூற்றைந்து, அரசர்க்குத் தொண்ணூறு, அமைச்சர்க்கு எழுபது, வணிகர்க்கு ஐம்பது, வேளாளர்க்கு முப்பது என்னும் அளவில் அமைய வேண்டும் என்பதும் விதி. இவ்வளவினை மீறிய கலம்பகங்களும் உண்டு.…
மேலும் படிக்க »பெண்பாற் பிள்ளைத் தமிழில் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழுக்கு அடுத்த நிலையில் விளங்கும் சிறப்புப் பெற்றது. 'திருநெல்வேலிக் காந்தியம்மை பிள்ளைத் தமிழ்'. இந்நூலைப் பாடியவர் திருநெல்வேலியைச் சார்ந்த தச்சன் நல்லூரில் வாழ்ந்த அழகிய சொக்கநாதர். இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டினர் .
சிறுமி காந்தியம்மையைக் கவிஞர் 'வருக வருக' என்றழைக்கும் வருகைப் பருவம் சிறப்பு மிக்கது .
வாரா திருந்தால் இனிநான் உன் வடிவேல் விழிக்கு மைஎழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகமிடேன் மணியால் இ…
இந்நூலையும் குமரகுருபரரே பாடினார். குமரகுருபரர் தருமபுரம் சென்று அங்கிருந்த மாசிலாமணி தேசிகரிடம் ஞானோபதேசம் பெற விரும்வினார். தேசிகரின் விருப்பப்படி சிதம்பரம் செல்லப் புறப்பட்ட குமரகுருபரர் வழியில் வைத்தீஸ்வரன் கோயிலை அடைந்தார். அங்கே எழுந்தருளி இருக்கும் குமரக் கடவுளைக் கண்டு, காதல் மீதூறத் தொழுது, பின்பு அவர் மீது 'முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்' பாடினார். வைத்தீஸ்வரன் கோயில் என்று இன்று வழங்கப்பெறும் ஊரின் பழைய பெயர், புள்ளிருக்கு வேளூர் என்பதாகும். …
மேலும் படிக்க »ஐந்தாண்டு வரை பேசாத ஊமைக் குழந்தையாயிருந்து பின்னர் தமிழ் வெள்ளம் பெருகிப் பாடும் பாடல்கள் பாடித் தமிழை வளர்த்த பெரும் புலவர் குமர குருபரர். இவர் கி.பி. 17ம் நூற்றாண்டில் பிறந்தார். இவர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழே, பிள்ளைத் தமிழ் நூல்களில் தலைசிறந்தது. திருமலை நாயக்கர் முன்னிலையில் குமரகுருபரர் இந்நூலை அரங்கேற்றும்போது, மீனாட்சியம்மையே சிறுமி வடிவில் அவைக்கு வந்து இந்நூலைக் கேட்டு அகமகிழ்ந்து அருள் புரிந்தாள் எனக் கூறுவர் .முத்தப் பருவத்தில்,காலத் தொடுகற் பன…
மேலும் படிக்க »